கல்வித் தகவல்கல்வி வழிகாட்டி தமிழக மாவட்டங்கள்பவர்பாய்ண்ட் பார்வைஆங்கிலம் அறிவோம்அப்துல் கலாம்அறிவியல் ஆயிரம்

கேள்வி-பதில்

¿õ ¯¼Ä¢Öõ, ¯ûÇò¾¢Öõ, ÍüÚô ÒÈò¾¢Öõ Àø§ÅÚ ¿¢¸ú׸û ¿¨¼¦ÀÚ¸¢ýÈÉ. «Åü¨Èô À¡÷츢§È¡õ, ¯½÷¸¢§È¡õ, «¨Å ÀüÈ¢ì §¸ûÅ¢ôÀθ¢§È¡õ. «É¡ø «¨Å ÀüÈ¢î º¢ó¾¢ô§À¡Á¡É¡ø ²ý, ±ýÉ, ±ôÀÊ, ±ùÅ¡Ú ±ýÛõ Ţɡì¸û §¾¡ýÚõ. «ùŢɡì¸ÙìÌ Å¢¨¼ ¸¡½ ÓÂýÈ¡ø «È¢Å¢Âø ¸¡Ã½í¸û ÁÄÕõ. 

"¿ÁìÌ ²ý ¨¸, ¸¡ø¸û ÁÃòÐô §À¡¸¢ýÈÉ?, §º¡¼¡Å¢ø º¢È¢¾Ç× ¯ô¨Àî §º÷ò¾¡ø «Ð ¦À¡í¸¢ ÅÆ¢ÅÐ ²ý?, ÀñÀ¨Ä ´Ä¢ÀÃôÒ ±ýÈ¡ø ±ýÉ?, ¦¸ðÊò ¾ý¨Á Å¡öó¾ ¸¡ö¸È¢¸û ¦Åó¾×¼ý ¦Áý¨Á¡¸¢Å¢ÎÅÐ ±ôÀÊ?, Á¢ýÁ¢É¢ô â¸Ç¢Ä¢ÕóÐ ¦ÅÇ¢îºõ ¯ñ¼¡ÅÐ ±ùÅ¡Ú? ¸½¢É¢ ¨ÅÊ ±ýÈ¡ø ±ýÉ?, ¿£Ã¢Æ¢× §¿¡Â¡Ç¢¸ÙìÌ þÃò¾ò¾¢ÖûÇ º÷츨à «Ç× ±ùÅ¡Ú «ÇÅ¢¼ôÀθ¢ÈÐ?" 

þò¾¨¸Â Ţɡì¸û áüÚì ¸½ì¸¢ø ¯ûÇÉ. ´ù¦Å¡Õ ¿¢¸ú×ìÌõ «È¢Å¢Âø ¸¡Ã½í¸û ¯ñÎ. «Åü¨È «È¢Å¢Âø áø¸û, þ¾ú¸û, ¸¨Äì ¸ÇﺢÂí¸û, ŨÄò ¾Çí¸û ¬¸¢ÂÅüȢĢÕóÐ ¦ÀÈÄ¡õ. «ùÅ¡Ú ¾¢Ãð¼ôÀð¼ ¸¡Ã½í¸¨Ç கேள்வி=பதில் ±ýÛõ ¾¨ÄôÀ¢ø Å¡º¸÷¸Ù¼ý À¸¢÷óÐ ¦¸¡ûŧ¾ எங்கள் §¿¡ì¸õ. þò¦¾¡¼Ã¢ý ¦Á¡Æ¢ ÅÊÅò¾¢üÌ ÁðΧÁ ¸ðΨà ¬º¢Ã¢Â÷ ¦À¡ÚôÒ; ¸ÕòиÙìÌ «øÄ. 

8 ´§Ã ¿¢¨Ä¢ø ¿¡õ ¨¸¸¨Ç§Â¡ «øÄÐ ¸¡ø¸¨Ç§Â¡ ¨ÅòÐì ¦¸¡ñÊÕó¾¡ø º¢È¢Ð §¿Ãõ ¸Æ¢òÐ «¨Å ÁÃòÐô §À¡ÅÐ ²ý ? 

¿¡õ ¿ÁÐ ¨¸¸¨Ç§Â¡ «øÄÐ ¸¡ø¸¨Ç§Â¡ º¢È¢Ð §¿Ãõ ´§Ã ¿¢¨Ä¢ø--ÌÈ¢ôÀ¡¸ ±¾ý Á£¾¡ÅÐ «Øò¾¢Â ¿¢¨Ä¢ø--- ¨ÅòÐì ¦¸¡ñÊÕó¾¡ø, «ôÀ̾¢ ÁÃòÐô§À¡ÅÐ ¯ñ¨Á§Â. ¾üÌì ¸¡Ã½õ ±ýɦÅýÈ¡ø, «ùÅ¡Ú ¿£ñ¼ §¿Ãõ «Øò¾ô¦ÀÚõ ÌÈ¢ôÀ¢ð¼ «ôÀ̾¢Â¢ø Ãò¾ µð¼õ ¾¨¼ôÀðÎ, ¿ÃõÒ¸û ¦ºÂüÀ¡ð¨¼ò ¾ü¸¡Ä¢Á¡¸ þÆóРŢθ¢ýÈÉ. þ¾ý Å¢¨ÇÅ¡¸ ¦¾¡Î ¯½÷ þÆì¸ô¦ÀüÚ ÁÃòÐô§À¡Ìõ ¿¢¨Ä «ôÀ̾¢¸Ç¢ø ¯ñ¼¡¸¢ÈÐ. ò¾¨¸Â ¿¢¨Ä ¾ü¸¡Ä¢¸Á¡Éо¡ý. «ôÀ̾¢¸Ç¢ø «Øò¾õ ¿£í¸ô¦ÀüÈ×¼ý, «¾¡ÅÐ ¨¸ ¸¡ø¸¨Ç ÂøÒ ¿¢¨ÄìÌì ¦¸¡ñÎÅó¾×¼ý, Ãò¾ µð¼õ º£Ã¨¼óÐ º¢È¢Ð §¿Ãò¾¢ø º¡¾¡Ã½ ¯½÷¨Åô ¦ÀÈÓʸ¢ÈÐ. 

8 À¢Š¸ð ݼ¡É À¡¨Ä Å¢¨ÃóÐ ¯È¢ïÍÅÐõ, ÌÇ¢÷ó¾ À¡¨Ä «ùÅ¡È¢ýÈ¢ ¦ÁÐÅ¡¸ ¯È¢ïÍÅÐõ ²ý? 

«Ïì¸û «øÄÐ ãÄìÜÚ¸Ù츢¨¼§Â ¸Å÷ Å¢¨ºÂ¢É¡ø ¯ñ¼¡Ìõ À¢¨½ô¨À §Åñ¼÷ Å¡ø (Vander Wall’s) À¢¨½ôÒ ±ýÀ÷. À¢Š¸ð¨¼ô ¦À¡Úò¾ Ũâø, «¾ý иû¸Ù츢¨¼§Â (particles) ¿¢Ä×õ §ÁüÜȢ «ôÀ¢¨½ôÒ ÅÄ¢¨Á ÌýȢ¾¡¸ ¯ûÇÐ. þ¾É¡ø À¢Š¸ð ¦Áý¨Á¡¸ þÕôÀмý ±Ç¢¾¢ø àÇ¡¸¢Ôõ Ţθ¢ÈÐ. «ÎòÐ À¢Š¸ð ¾ñ½£¨Ã ±Ç¢¾¢ø ¯È¢ïº¢ Å¢ÎŨ¾ì ¸¡½Ä¡õ. þ¾üÌì ¸¡Ã½õ «¾ý иû¸Ù츢¨¼§ÂÔûÇ §Åñ¼÷ Å¡ø À¢¨½ôÒ ¾ñ½£Ã¢ý ¦¾¡¼÷À¡ø º¢¨¾ì¸ô¦ÀüÚ Á¢¸×õ Á¢ÕÐò ¾ý¨Á «¨¼óÐÅ¢Îŧ¾Â¡Ìõ. 

À¡¨Äô ¦À¡Úò¾Å¨Ã, «Ð ¾ñ½£÷ ÁüÚõ À¡Ìò¾ý¨Á (viscous) ¦¸¡ñ¼ Òþõ, ¦¸¡ØôÒ ¬¸¢ÂÅüÈ¢ý ¸Ä¨Å¡Ìõ. À¢Š¸ð¨¼ô À¡Ä¢ø §¾¡öò¾×¼ý, «¾¢ÖûÇ ¾ñ½£÷ ²ü¸É§Å ÌÈ¢ôÀ¢ð¼Å¡Ú À¢Š¸ð иû¸Ù¼ý Å¢¨ÉÒâóÐ À¢Š¸ð¨¼ Á¢ÕÐò¾ý¨Á «¨¼ÂöÐÅ¢Îõ. §ÁÖõ ݼ¡É À¡Ä¢ø Òþõ ¦¸¡ØôÒ ¬¸¢ÂÅüÈ¢ý À¡Ìò¾ý¨Á Á¢¸×õ ̨ÈóÐ §À¡öŢθ¢ÈÐ. À¢Š¸ð ݼ¡É «ó¿¢¨Ä¢ø, ݼ¡É À¡ø Á¢¸×õ Å¢¨ÃóÐ À¢Š¸ð иû¸Ù츢¨¼§Â ÀÃ׸¢ÈÐ. ¾ý ¸¡Ã½Á¡¸ À¡¨Ä Å¢¨ÃóÐ ¯È¢ïº¢ì¦¸¡û¸¢ÈÐ. ùÅ¢¨Ã×ò ¾ý¨Á ¬È¢Â À¡Ä¢ø þøÄ¡Áø þÕôÀ¾üÌì ¸¡Ã½õ «¾¢ÖûÇ À¡Ìò¾ý¨Á ̨ÈÅ¢ýÈ¢ þÂøÒ ¿¢¨Ä¢ø ÕôÀ§¾Â¡Ìõ. 

8 Àõ¨Àô (pump) ÀÂýÀÎò¾¢ Á¢¾¢ÅñÊî ºì¸Ãò¾¢üÌì ¸¡üÈÊìÌõ§À¡Ð, Àõô ÌÆ¡ö ݼ¡ÅÐ ²ý ? 

«ÊôÀ¨¼Â¢ø Àõô ±ýÀÐ ¸¡ü¨È «ØòОüÌô ÀÂýÀÎõ ´Õ º¡¾Éõ. Á¢¾¢ÅñÊî ºì¸Ãò¾¢üÌì ¸¡ü¨È ²üÚõ§À¡Ð ÀõÀ¢ý ¿ÎôÀ̾¢Â¢ø ¯ûÇ ¾ñ¼¡ÉÐ(rod) §ÁÖõ ¸£Øõ Á¡È¢ Á¡È¢ Å¢¨ÃóÐ ¦ºøŨ¾ì ¸¡ñ¸¢§È¡õ; ¸£ú§¿¡ì¸¢î ¦ºøÖõ§À¡Ð ¸¡üÚ «¾¢¸Á¡É «Øò¾¾¢üÌ ¯ðÀðÎ «¾ý ¦ÅôÀ¿¢¨Ä (temperature) Á¢Ì¾¢Â¡¸¢ÈÐ. §ÁÖõ Àõô Å¢¨ÃóÐ ¦ºÂøÀΞ¡ø ¸¡üÈ¢ø «Øò¾õ Á¢Ì¾¢Â¡¸ ²üÀðÎ, Üξø ¦ÅôÀÓõ ¯ñ¼¡¸¢ÈÐ. þùÅ¡Ú Å¢¨ÃÅ¡¸ ¯üÀò¾¢Â¡Ìõ ¦ÅôÀõ «¾üÌ ²üÈ Å¨¸Â¢ø Å¢¨ÃóÐ ¦ÅÇ¢§ÂÈ ÓÊž¢ø¨Ä. þ¾ý Å¢¨ÇÅ¡¸ ÀõÀ¢ý ¦ÅÇ¢ôÒÈô À̾¢ìÌ ¦ÅôÀõ ÀÃÅ¢ ÌÆ¡ö ݼ¡¸¢ÈÐ.

§Á¡ð¼¡÷ ¨ºì¸¢Ç¢ø ¯ûÇ ºì¸Ãí¸Ç¢ø ¬¨Ãì ¸õÀ¢¸û (spokes) þÕôÀÐõ, ŠÜð¼÷ ºì¸Ãí¸Ç¢ø «¨Å þøÄ¡Áø þÕôÀÐõ ²ý?
§Á¡ð¼¡÷ ¨ºì¸¢û ÁüÚõ ŠÜð¼÷ ¬¸¢ÂÅüÈ¢ý ºì¸Ãí¸Ç¢ø, ´ýÈ¢ø ¬¨Ãì¸õÀ¢¸û ÕôÀ¾üÌõ, ÁüÈÅüÈ¢ø «¨Å þøÄ¡Áø þÕôÀ¾üÌõ, ¦À⠫ȢŢÂø ¸¡Ã½õ ²ÐÁ¢ø¨Ä. §Á¡ð¼¡÷ ¨ºì¸¢Ç¢ý ºì¸Ãí¸û, ŠÜð¼÷ ºì¸Ãí¸¨Ç Å¢¼ «ÇÅ¢ø «¾¡ÅРŢð¼ò¾¢ø ¦Àâ¨Å; ±É§Å §Á¡ð¼¡÷ ¨ºì¸¢Ç¢ý ºì¸Ãí¸¨Çì ¸õÀ¢¸Ç¢ýÈ¢ ¾¢ñ½¢Â (solid) ¦À¡ÕÇ¡¸ «¨Áò¾¡ø ±¨¼ Á¢Ì¾¢Â¡¸¢ «Åü¨È Å¢¨ÃóÐ ¦ºÖòОüÌ Üξø ¬üÈø §¾¨ÅôÀÎõ. Á¡È¡¸ ŠÜð¼÷ ºì¸Ãí¸û º¢È¢Â¨Å; ±É§Å ÓبÁÂ¡É ¾¢ñÁ ¿¢¨Ä¢Öõ «ÅüÈ¢ý ±¨¼ Á¢Ì¾¢Â¡Å¾¢ø¨Ä. «§¾ §¿Ãò¾¢ø ¸õÀ¢¸Ù¼ý ÜÊ ºì¸Ãí¸û Å¢ÀòÐ «øÄÐ §ÅÚ ¸¡Ã½í¸Ç¡ø, ±Ç¢¾¢ø ¾ÁÐ º£Ã¡É Åð¼ ÅÊÅò¨¾ þÆóРŢÎõ Å¡öôÒ ¯ñÎ. ±É§Å ±¨¼ Á¢Ì¾¢ ±ýÈ ´Õ ̨ȨÂò ¾Å¢÷òÐô À¡÷ò¾¡ø ¸õÀ¢¸Ç¢ýÈ¢ ´§Ã ¾¢ñÁò ¾ý¨ÁÔ¼ý ÜÊ ºì¸Ãí¸¨Çô ÀÂý ÀÎòÐÅÐ º¢Èó¾Ð ±ÉÄ¡õ. ¾ü§À¡Ð Àó¾Â §Á¡ð¼¡÷ ¨ºì¸¢û¸Ç¢ø, ¸¡÷Àý þ¨Æì ¸Ä¨ÅÔ¼ý ÜÊ ¦À¡Õ¨Çì ¦¸¡ñÎ ¦ºöÂôÀð¼, ±¨¼ ̨Èó¾, ¬¨Ãì¸õÀ¢¸ÇüÈ, ¾¢ñÁÁ¡É ¦Àâ ºì¸Ãí¸¨Çô ÀÂý ÀÎòÐŨ¾ì ¸¡½Ä¡õ. 

8 §º¡¼¡ §À¡ýÈ ¦ÁýÀ¡Éí¸Ç¢ø (soft drinks) º¢È¢¾Ç× ¯ô¨Àî §º÷ò¾×¼ý, «¨Å ѨÃÔ¼ý ¦ÅÇ¢§Â ¦À¡í¸¢ÅÆ¢ÅÐ ²ý ?
¦ÁýÀ¡Éõ ±ýÀÐ ¸Ã¢ÁÅ¡ì¸õ (carbonated) ¦ºöÂôÀð¼, Á½õ/¦¿Ê §º÷ó¾ ¦ÅÚõ ¾ñ½£÷¾¡ý. «¾¡ÅÐ ¾ñ½£÷ ±ó¾ «Ç× ¸Ã¢ÂÁ¢Ä šԨŠ(carbon-di-oxide) ²üÚì ¦¸¡ûÙ§Á¡, «¨¾Å¢¼ì ÜÎ¾Ä¡É Å¡Ô¨Å Á£×Â÷ (supersaturated) «Øò¾ò¾¢ø ¸ÄóÐ ¯ñ¼¡ì¸ô Àð¼¨Å§Â þò¾¨¸Â ¦ÁýÀ¡Éí¸Ç¡Ìõ. þ¨Å Á¢¸ ¯Â÷ó¾ «Øò¾ò¾¢Öõ, ̨Èó¾ ¦ÅôÀ ¿¢¨Ä¢Öõ (temperature) ¾Â¡Ã¢ì¸ôÀθ¢ýÈÉ. «ô§À¡Ð Å¡Ô×ìÌõ ¾ñ½£ÕìÌõ þ¨¼§Â ´Õ Ũ¸î ºÁ¿¢¨Ä (equilibrium) ¯ÕÅ¡¸¢ÈÐ. À¡Éõ ¿¢ÃõÀ¢ÔûÇ ¦¸¡û¸ÄÉ¢ý ãʨÂò ¾¢ÈìÌõ§À¡Ð «Øò¾õ ̨ÈóÐ §ÁüÜȢ ºÁÉ¢¨Ä À¡¾¢ì¸ôÀθ¢ÈÐ. þ¾É¡ø Üξġ¸ «¨¼ì¸ôÀðÊÕìÌõ Å¡ÔÅ¡ÉÐ ÌÁ¢ú¸Ç¡¸ ¦ÅÇ¢§ÂÈò ÐÅí̸¢ÈÐ. «ó¿¢¨Ä¢ø À¡Éò¾¢ø ÍüÚôÒÈ «Øò¾ò¾¢üÌõ, ¦ÅôÀ ¿¢¨ÄìÌõ ²üÈ Å¨¸Â¢ø Ò¾¢Â ºÁ¿¢¨Ä ¯ÕÅ¡Ìõ. «ô§À¡Ð ¯ô¨Àî §º÷ò¾¡ø ºÁÉ¢¨Ä Á£ñÎõ À¡¾¢ì¸ôÀðÎ Á£×Â÷ «Øò¾ò¾¢ø «¨¼ì¸ôÀð¼ Å¡ÔÅ¡ÉРѨÃòÐ즸¡ñÎ ÌÁ¢ú¸Ç¡¸ ¦ÅÇ¢§ÂÚ¸¢ýÈÐ. §º÷ì¸ôÀÎõ ¯ôÀ¢ý «Ç×째üÀ þ󿢸ú Å¢¨ÃóÐõ ¾£Å¢ÃÁ¡¸×õ ¿¨¼¦ÀÚõ. Üξø Å¡Ô ¦ÅÇ¢§ÂÚõ Ũà þ󿢸ú ¦¾¡¼Õõ. À¡Éõ ¿¢ÃõÀ¢Â ¦¸¡û¸Ä¨Éò ¾¢È측Á§Ä, ºüÚ §Å¸Á¡¸ ¬ðÊÉ¡ø ܼ, ºÁ¿¢¨Ä À¡¾¢ì¸ôÀðÎ À¡Éò¾¢ø ѨÃÔ¼ý ÜÊ ÌÁ¢ú¸û ¯ñ¼¡Å¨¾ì ¸¡½Ä¡õ. 

ÌÇ¢÷ ¸¡Äì ¸¡¨Ä §¿Ãí¸Ç¢ø, §Á¡ð¼¡÷ ¸¡÷¸¨Ç µð¼ò ÐÅìÌžüÌî, º¢ÃÁôÀ¼ §ÅñÊ¢ÕôÀÐ ²ý ?
§Á¡ð¼¡÷ ¸¡÷ §À¡ýÈ ¾¡É¢Âí¸¢¸û(automobiles) µÎžüÌ, ¯û ±Ã¢ô ¦À¡È¢¸û (internal combustion engines) þýȢ¨Á¾¨Å. þô¦À¡È¢Â¢ø ¯ûÇ ãÊ ¦¸¡û¸ÄÛû (chamber) ¦Àð§Ã¡ø, ˺ø §À¡ýÈ ±Ã¢ ¦À¡ÕÙõ ¸¡üÚõ ¸Äó¾ ¸Ä¨Å¡ÉÐ Á¢Ìó¾ «Øò¾ò¾¢ø ¦ÅÊô¦À¡Ä¢Ô¼ý ÀüȨÅòÐ ±Ã¢äð¼ôÀθ¢ÈÐ. þ¾É¡ø ¯û§Ç¢ÕìÌõ ¯óоñ¼¡ÉÐ (piston) ¸£§Æ ¾ûÇôÀÎõ. þó¾ ¿¢¸ú ¦¾¡¼÷¡¸ô ÀÄ ¦¸¡û¸Äý¸Ùû ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ. þ¾ý ¸¡Ã½Á¡¸ «íÌûÇ ÍÆø ¾ñ¼¡ÉÐ(shaft) ÍÆøÅмý, «¾Û¼ý þ¨½ì¸ô ÀðÊÕìÌõ ºì¸Ãí¸Ùõ ÍÆÄ ¬ÃõÀ¢òÐ, «¾É¡ø ¸¡Õõ µ¼òÐÅí̸¢ÈÐ. ±Ã¢¦À¡ÕÙõ ¸¡üÚõ ¸Äó¾ ¸Ä¨Å¡ÉÐ ±Ã¢äð¼ôÀΞüÌô ÀÄ ¸¡Ã½í¸Ç¢ÕôÀ¢Ûõ, «ÅüÚû ¦ÅôÀ¿¢¨Ä Ó츢ÂÁ¡É ´ýÈ¡Ìõ. ÌÇ¢÷¸¡Äì ¸¡¨Äô¦À¡Ø¾¢ø ¸¡Ã¢ý ±ïº¢ý À̾¢ Á¢¸×õ ÌÇ¢÷¡¸ þÕôÀ¾¡ø ¯û§Ç ±Ã¢ ¦À¡Õ¨Çô ÀüȨÅôÀ¾üÌò §¾¨ÅÂ¡É ¦ÅôÀ¿¢¨Ä¨Â «¨¼Âî º¢È¢Ð §¿Ãõ §¾¨Åô Àθ¢ÈÐ. þ¾ý ¸¡Ã½Á¡¸ì ¸¡¨Ã µð¼ò ÐÅíÌžüÌî ºüÚ º¢ÃÁôÀ¼ §ÅñÊÔûÇÐ. þó¿¢¨Ä ÌÇ¢÷ôÀ̾¢¸Ç¢ø Á¢¸î º¡¾¡Ã½Á¡¸ì ¸¡½ìÜʾ¡Ìõ. Á¢¸×õ ÌÇ¢÷ó¾ À̾¢¸Ç¢ø þ󿢨ĨÂî ºÁ¡Ç¢ìÌõ ¦À¡ÕðÎ, ̨Èó¾ ¦ÅôÀ¿¢¨Ä¢ø ±Ã¢äð¼ôÀ¼ìÜÊ ¨†ð§Ã¡¸¡÷Àý §º÷ó¾ ¦Àð§Ã¡¨Äô ÀÂýÀÎò¾¢, ̨ÈÅ¡É ¦ÅôÀ¿¢¨Ä¢ø ¸¡¨Ã µ¼ò ÐÅíÌõÀÊî ¦ºö¸¢ýÈÉ÷. 

ÀÇíÌÆ󨾸û ¨¸ ÝôÒõ ÀÆì¸ò¨¾ì ¦¸¡ñÊÕôÀ§¾ý ?
þôÀÆì¸õ þÇíÌÆ󨾸ÙìÌ þÂü¨¸Â¡¸§Å ÅÕž¡Ìõ. ÌÆ󨾸û À¢Èó¾×¼§É ¾¡öôÀ¡ø «Õóи¢ýÈÉ; À¢ýÉ÷ ÒðÊôÀ¡ø ÌÊ츢ýÈÉ. «ô§À¡Ð š¢ɡø À¡¨Ä ¯È¢ïº¢ì ÌÊìÌõ§À¡Ð ²üÀÎõ À¡Ð¸¡ôÒ ¯½÷¨Å Á£ñÎõ ¦ÀÚõ §¿¡ì¸ò¾¢§Ä§Â ÌÆ󨾸û Å¢Ã¨Ä ÝôÀ ¬ÃõÀ¢ì¸¢ýÈÉ÷. ÁÕòÐÅ ÅøÖ¿÷¸û ¸ÕòÐôÀÊ, ÌÆ󨾸Ǣý þôÀÆì¸ò¨¾ô ÀüÈ¢ «¿¡Åº¢ÂÁ¡É ¸Å¨Ä ¦¸¡ûÇò §¾¨Å¢ø¨Ä. «îºõ, ¸Å¨Ä, Ðì¸õ ¬¸¢Â¨Å ¸¡Ã½Á¡¸, ¦Àâ º¢ÚÅ÷¸Ùõ «ùÅô§À¡Ð ¨¸ÝôÒÅÐñÎ. þ¾üÌì ¸¡Ã½õ þôÀÆì¸ò¾¢É¡ø «Å÷¸ðÌ ´ÕŨ¸ ¯½÷×â÷ÅÁ¡É ¬¾Ã×õ À¡Ð¸¡ôÒõ ¸¢¨¼ì¸¢ýÈÉ. þÕôÀ¢Ûõ ÅÇ÷ó¾ ÌÆ󨾸û ôÀÆì¸ò¨¾ §Áü ¦¸¡ûÙõ§À¡Ð «¾¨Éì ¸ñÊôÀ¡¸ò ¾Îò¾¢¼ §ÅñÎõ.

¯Ä÷ó¾ Á½üÀ̾¢¨Â Å¢¼, ®ÃÁ¡É Á½üÀ̾¢Â¢ø ±Ç¢¾¡¸ ¿¼ì¸ ÓÊÅÐ ²ý?
±ó¾ ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ ¦À¡ÕÇ¢ý ãÄìÜڸ𸢨¼§ÂÔõ ´Õ Ũ¸Â¡É ¸Å÷ Å¢¨º ¿¢Ä׸¢ÈÐ. þùÅ¢¨ºÂ¢¨É À¢¨½ôÒ Å¢¨º (Cohesive force) ±ýÀ÷. ¬É¡ø þÕ§ÅÚ ¦À¡Õû¸û ´ý§È¡¦¼¡ýÚ §ºÕõ §À¡Ð, «ÅüÈ¢ý ãÄìÜڸ𸢨¼§ÂÔõ ´Õ Ũ¸Â¡É ¸Å÷ Å¢¨º ¯ñ¼¡¸¢ÈÐ. «¾¨É ´ðÎÅ¢¨º (adhesive force) ±ÉìÜÚÅ÷.

Á½Öõ ¾ñ½£Õõ ¸Äó¾ ®ÃÁ½Ä¢ý ãÄìÜڸ𸢨¼§Â ¯ñ¼¡Ìõ ´ðÎÅ¢¨ºÂ¡ÉÐ, ¯Ä÷ó¾ Á½Ä¢ý ãÄìÜڸ𸢨¼§Â ¿¢Ä×õ À¢¨½ôÒ Å¢¨º¨ÂÅ¢¼ Á¢¸×õ ÅÄ¢¨Á¡ɾ¡Ìõ. ¾ñ½£Õõ Á½Öõ ¸Äó¾ ¸Ä¨Å¢ý ãÄìÜڸ𸢨¼§Â ¯ñ¼¡Ìõ þò¾¨¸Â ÅÄ¢¨ÁÂ¡É ´ðΠިºÂ¢ý ¸¡Ã½Á¡¸, ®Ã Á½üÀÃôÀ¢ø §À¡ÐÁ¡É ¦¸ðÊò¾ý¨Á ²üÀðÎ, «¾ý Á£Ð ±Ç¢¾¡¸ µ¼×õ, ¿¼ì¸×õ Óʸ¢ÈÐ. ¬É¡ø ¯Ä÷ó¾ Á½Ä¢ý ãÄìÜڸ𸢨¼§Â ¿¢Ä×õ À¢¨½ôÒ Å¢¨ºÂ¡ÉÐ, Á½Ä¢ý иû¸¨Ç ´ý§È¡¦¼¡ýÚ þÚì¸Á¡¸ ´ð¼¨ÅôÀ¾üÌô §À¡ÐÁ¡É¾¡¸ þøÄ¡¾ ¸¡Ã½ò¾¡ø Á½üÀÃôÀ¡ÉÐ ¦¸ðÊò¾ý¨Á ̨ÈóÐ ¾Ç÷¡¸ þÕìÌõ. þ󿢨Ä¢ø ¡§ÃÛõ ¿¼ó¾¡ø, ¯¼ÄØò¾õ ¸¡Ã½Á¡¸ «ÅÃÐ ¸¡ø¸û ¯Ä÷Á½Ä¢ø ¬ÆÁ¡¸ô À¾¢óÐ, Á½üÀÃôÀ¢ø ±Ç¢¾¡¸ ¿¼ì¸ þÂÄ¡Áü§À¡¸¢ÈÐ.

Å¢ÈÌì ¸Ã¢¨Â ±Ã¢ìÌõ§À¡Ð ¯ñ¼¡Ìõ Ò¨¸¨ÂÅ¢¼, ŢȨ¸ ±Ã¢ìÌõ§À¡Ð ¯ñ¼¡Ìõ Ò¨¸ Á¢Ì¾¢Â¡¸ þÕôÀÐ ²ý ?
º¡õÀø, ¬Å¢Â¡Ìõ À¢ÍÀ¢ÍôÀ¡É ±ñ¦½ö §À¡ýÈ ¿£÷Áô ¦À¡Õû «øÄÐ ¸Ã¢Áô ¦À¡Õû ¬¸¢ÂÅü¨È ¯ûǼ츢 ݼ¡É, §Äº¡É ¸÷Àý - ¨¼-¬ì¨ºÎ ¾¡ý Ò¨¸ ±ÉôÀθ¢ÈÐ. §ÁüÜȢ ¦À¡Õð¸Ç¢ø ´Ç¢îº¢¾Èø ²üÀΞ¡Öõ, ¦À¡ÐÅ¡¸ì ¸¡÷Àý - ¨¼ - ¬ì¨ºÊø ´Ç¢ °ÎÕÅ ÓÊž¡Öõ Ò¨¸Â¢ý §¾¡üÈò¨¾ ¿¡õ ¸¡½ þÂÖ¸¢ÈÐ. º¡¾¡Ã½Á¡¸ ±Ã¢¦À¡Õû ´ýÚ ÓبÁ¡¸ ±Ã¢óРŢð¼¡ø ¸¡÷Àý - ¨¼ - ¬ì¨ºÎõ, ¿£Ã¡Å¢Ôõ¾¡ý ¦ÅÇ¢ôÀÎõ. ±Ã¢Å¾üÌô §À¡ÐÁ¡É ¦ÅôÀõ «øÄÐ §¾¨ÅÂ¡É «Ç× ¯Â¢÷ÅÇ¢ (oxygen) þøÄ¡¨Á¡ø º¢Ä §¿Ãí¸Ç¢ø ±Ã¢¦À¡Õð¸û ÓبÁ¡¸ ±Ã¢Å¾¢ø¨Ä. þùÅ¡Ú «¨Ã ̨È¡¸ ±Ã¢ó¾ ±Ã¢¦À¡Õð¸û ¸¡÷Àý - ¨¼ - ¬ì¨ºÎ¼ý §º÷óÐ Ò¨¸Â¡¸ Á¡Ú¸¢ÈÐ.

Ţȸ¢ø ¸ÄóÐûÇ ¦ºø֧ġŠ ±ÉôÀÎõ Á¡Å¢Â þ¨Æ¸û, ¦ÁØÌ, ¬Å¢Â¡Ìõ ¨¾Äô ¦À¡Õð¸û ¬¸¢ÂÉ ÓýÒ ¦º¡ýÉ ¸¡Ã½í¸Ç¡ø ÓبÁ¡¸ ±Ã¢Â¡Áü §À¡ÅÐñÎ. «ô§À¡Ð «¨Å Ò¨¸Â¡¸ ¦ÅÇ¢ôÀÎõ. Å¢ÈÌì ¸Ã¢ §ÁüÜȢ ¦À¡Õð¸û ±Ð×õ þøÄ¡¾ ÓبÁÂ¡É ¸Ã¢Áô ¦À¡ÕÇ¡Ìõ. ±É§Å þ¾¨É ±Ã¢ìÌõ§À¡Ð «¾¢¸ô Ò¨¸ ¯ñ¼¡Å¾¢ø¨Ä.

Åñ½ò à⨸¢ý (paint brush) þ¨Æ¸û ¿£ÕìÌ ¦ÅÇ¢§Â ´ý§È¡¦¼¡ýÚ ´ðÊ즸¡ñÎõ, ¿£Ã¢Ûû ´ý§È¡¦¼¡ýÚ ´ð¼¡Áø À¢Ã¢óÐõ þÕôÀÐõ ²ý ?
Åñ½òà⨸¢ÖûÇ þ¨Æ¸Ç¢ý «¼÷ò¾¢Ôõ (density), ¿£Ã¢ý «¼÷ò¾¢Ôõ ²Èį̀È ºÁÁ¡Ìõ. ±É§Å à⨸¨Â ¿£Ã¢Ûû ¨Åò¾¢ÕìÌõ§À¡Ð ¿£Ã¢ý Á¢¾ôÀ¡üÈø (Buoyancy) ¸¡Ã½Á¡¸ à⨸¢ý þ¨Æ¸û §Á¦ÄØõÒ¸¢ýÈÉ. þ¾ý Å¢¨ÇÅ¡¸ þ¨Æ¸û ¾É¢ò¾É¢§Â À¢Ã¢óÐ ¿¢üÌõ. ¾ñ½£Ã¡ø ¿¨Éì¸ô¦ÀüÈ ¿¢¨Ä¢ø, à⨸¨Â ¿£ÕìÌ ¦ÅÇ¢§Â ±ÎìÌõ §À¡Ð, þ¨Æ¸Ç¢ý ãÄìÜÚ¸ÙìÌõ (molecules) ¾ñ½£Ã¢ý ãÄìÜÚ¸ÙìÌõ þ¨¼§Â ¯ñ¼¡Ìõ ´ðÎÅ¢¨ºÂ¢ý (Cohesive force) ¸¡Ã½Á¡¸, þ¨Æ¸û ´ý§È¡¦¼¡ýÚ ´ðÊ즸¡ñÎ À¢Ã¢Â¡Áø þÕìÌõ.
ÀÕì¸û ¯¼Ä¢ý À¢È À̾¢¸Ç¢ø ÅáÁø, Ó¸ò¾¢ø ÁðΧÁ Á¢Ì¾¢Â¡¸ ÅÕÅÐ ²ý?
Ó¸ò¾¢ý §¾¡üÀÃôÀ¢ø º¢Åó¾ ¿¢Èò¾¢ø §¾¡ýÚõ Á¢¸î º¢Ú ¸ðʸ¨Ç Ó¸ôÀÕ ±ý¸¢§È¡õ. þôÀÕì¸Ùû º£úòÐÇ¢¸Ùõ (pus) þÕìÌõ. ¦ÀÕõÀ¡Öõ 13 Ó¾ø 20 ÅÂÐŨà ¯ûÇ þ¨Ç»÷¸ð§¸ Ó¸ôÀÕ Á¢Ì¾¢Â¡¸ ÅÕ¸¢ÈÐ. þ¾üÌô ÀÄ ¸¡Ã½í¸û ¯Ç. ÀÕÅ Ó¾¢üº¢Â¢É¡ø §¾¡üÍÃôÀ¢¸Ç¢ø ±ñ¦½öô À¢ÍôÒ¨¼Â ´ÕŨ¸ì ¦¸¡ØôÒô ¦À¡Õû Á¢Ì¾¢Â¡¸î ÍÃ츢ÈÐ. þÐ §¾¡üÀÃôÀ¢ý Á¢¸ Ññ½¢Â ШǸû ÅÆ¢§Â ¦ÅÇ¢§ÂÚõ§À¡Ð §¾¡Ä¢ý «ÊôÒÈÓûÇ ¾¢Íì¸û (tissues) º¢ÅóÐ Å£í¸¢ ÀÕì¸Ç¡¸ì ¸¡ðº¢ÂǢ츢ýÈÉ. À¡ìËâ¡ ±ÉôÀÎõ ÑñÏ¢â¸Ç¢É¡ø Å¢¨ÇÔõ ¦¾¡üÈø (infection) ¸¡Ã½Á¡¸×õ, ¿¨Áîºø ²üÀðÎ §ÁüÜȢ À¢ÍÀ¢ÍôÀ¡É ¦¸¡ØôÒ ±ñ¦½ö, º£Æ¡¸ Á¡È¢î º¢ÅóÐ ÀÕì¸Ç¡ÅÐñÎ. °ð¼Á¡É ¯½× ¯ð¦¸¡ûǨÁ, ¸Å¨ÄôÀξø, ¿øÄ ¸¡ü§È¡ð¼Á¢øÄ¡¾ «Íò¾Á¡É ÝÆÄ¢ø ź¢ò¾ø ¬¸¢¨ÅÔõ ÀÕì¸û §¾¡ýÈì ¸¡Ã½õ ±ÉÄ¡õ. ¯¼üÀ̾¢Â¢§Ä§Â Ó¸õ¾¡ý ÑðÀÁ¡É ¯½÷¸ÙìÌõ, àñ¼ø¸ÙìÌõ ¯ðÀÎõ À̾¢Â¡Ìõ. ±É§Å¾¡ý ÀÕì¸û «¾¢¸Á¡¸ Ó¸ò¾¢ø §¾¡ýÚ¸¢ýÈÉ. ÀÕì¸û §ÁÖõ ÀÃÅ¡Áø ¾Îì¸ ¿øÄ ¿£¨ÃÔõ, §º¡ô¨ÀÔõ ÀÂýÀÎò¾¢, «ùÅô§À¡Ð Ó¸ò¨¾ì ¸ØÅ¢, àö¨ÁÂ¡É ÐñÊÉ¡ø Ш¼ì¸ §ÅñÎõ.

8 Ò¨¾Á½üÀÃôÀ¢ø ±¨¼ÜÊ ¦À¡Õð¸û Ò¨¾ÔñÎ §À¡ÅÐõ, º¡¾¡Ã½ Á½üÀÃôÀ¢ø «ùÅ¡Ú ¿¢¸Æ¡¾Ðõ ²ý?

º¡¾¡Ã½ Á½ø иû¸Ù츢¨¼§Â ¿¢Ä×õ À¢¨½ôÒ Å¢¨ºÂ¢É¡ø (cohesive force) ¯ñ¼¡Ìõ ¯Ã¡öÅ¢ý (friction) ¸¡Ã½Á¡¸ ±¨¼ÜÊ ¦À¡Õð¸û ¸£úôÒÈõ ¦ºøÅÐ ¾Å¢÷ì¸ôÀθ¢ÈÐ. ¬É¡ø Ò¨¾Á½ø ±ýÀÐ Á½ø иû¸Ùõ ²Ã¡ÇÁ¡É ¿£Õõ ¸Äó¾ ´Õ ¸Ä¨Å. Á½Ö¼ý ¸ÄóÐûÇ ¾ñ½£Ã¢ý ãÄìÜÚ¸û Á½ø иû¸Ù츢¨¼§Â ¿¢Ä×õ §ÁüÜȢ ¯Ã¡ö¨Åì ̨ÈòРŢθ¢ÈÐ. ±É§Å þò¾¨¸Â ¯¾¢÷Á½üÀÃôÀ¢ø ±¨¼ ÜÊ ¦À¡Õð¸û ¸£§Æ ¦ºøžüÌ ±ùÅ¢¾ò ¾¨¼Ôõ ¯ñ¼¡Å¾¢ø¨Ä. þ¾É¡ø ¸ÉÁ¡É ¦À¡Õð¸û Ò¨¾Á½Ä¢ø ±Ç¢¾¡¸ô Ò¨¾ÔñÎ §À¡¸¢ýÈÉ.

8 ÁÉ¢¾É¡ø Ó¾ý ӾĢø ¸ñÎÀ¢Êì¸ôÀð¼ ¯§Ä¡¸õ ±Ð? 

¦À¡ý, ¦ÅûÇ¢, ®Âõ, ¦ºõÒ, þÕõÒ, ¾¸Ãõ, À¾Ãºõ ¸¢ÂÉ Áì¸Ç¡ø ÀÆí¸¡Äò¾¢ø þÕóÐ ÀÂý ÀÎò¾ôÀðÎ ÅÕõ ¯§Ä¡¸í¸û. þÕôÀ¢Ûõ ÁÉ¢¾ þÉò¾¡ø ӾĢø ¸ñÎÀ¢Êì¸ôÀð¼ ¯§Ä¡¸Á¡¸ì ¸Õ¾ôÀÎÅÐ ¾í¸§Á. ¬üÚôÀΨ¸¸Ç¢ø ¦À¡ý ¾¡Ðì¸û À¡Ç ÅÊÅ¢ø «È¢ÂôÀð¼É. ¬¸ü¸¡Äò¾¢ý þÚ¾¢ô À̾¢Â¢ø þì¸ñÎÀ¢ÊôÒ ¿¢¸úó¾¢Õì¸Ä¡õ ±É ¬Ã¡ö¡Ç÷¸û ¸Õи¢ýÈÉ÷. «ô§À¡¾¢Õó§¾ ¿¨¸Ôõ «½¢¸Äý¸Ùõ ¦ºö þùקġ¸õ ÀÂýÀðÎ ÅÕ¸¢ýÈÐ.

8 ÀñÀ¨Ä ´Ä¢ÀÃôÒ (F M Transmission) ±ýÀÐ ±ýÉ ?

Å¡¦É¡Ä¢Â¢ý ´Ä¢ÀÃôÀ¢Öõ, ¦¾¡¨Ä측ðº¢Â¢ý ´Ç¢ÀÃôÀ¢Öõ, ¯Â÷ «¾¢÷¦Åñ (high frequency) ¦¸¡ñ¼ Á¢ý ¸¡ó¾ «¨Ä¸û (electro magnetic waves) Ì¨È «¾¢÷¦Åñ ¦¸¡ñ¼ ´Ä¢, ´Ç¢ ºÁ¢ì¨¸¸¨Çî(audio, video signals) ÍÁóÐ ¦ºøÖõ ÍÁôÀ¡ý¸Ç¡¸ô (carriers) À½¢ Ò⸢ýÈÉ. «ùÅ¡Ú ÍÁóÐ ¦ºøÖõ§À¡Ð, Á¢ý¸¡ó¾ «¨Ä¸û, ´Ä¢, ´Ç¢ «¨Ä¸Ç¡ø ÀñÀ¡ì¸õ ¦ÀÚ¸¢ýÈÉ.

þôÀñÀ¡ì¸õ þÕ ÅÆ¢¸Ç¢ø ¦ºöÂôÀ¼Ä¡õ. «¾¢÷¦Åñ 
(frequency) Á¡üÈò¾¢ý ãÄÓõ, «¨Ä¢ý ţ (amplititude) Á¡üÚžý ãÄÓõ ¦ºöÂÄ¡õ. ӾĢø ÌÈ¢ôÀ¢ð¼ ӨȢø ¦ºöÂôÀÎÅÐ «¾¢÷¦Åñ ÀñÀ¡ì¸õ (FM - Frequency Modulation)±ÉôÀÎõ. «Îò¾¨¾ «¨ÄÅ£îÍ ÀñÀ¡ì¸õ (AM - Amplitude Modulation) ±ýÀ÷. Á¢ýÉø, þÊ §À¡ýÈÅüÈ¡ø AM ´Ä¢ÀÃôÀ¢ø ¸Ã ¸Ã ´Ä¢ þ¨¼äÚ¸û ¯ñ¼¡Ìõ Å¡öôÒñÎ. ¬É¡ø FM ´Ä¢ ÀÃôÀ¢ø þò¾¨¸Â þ¨¼äÚ¸û ²ÐÁ¢ýÈ¢ ÐøÄ¢ÂÁ¡É ´Ä¢¨Âì §¸ð¸Ä¡õ. ¦¾¡¨Ä측ðº¢Â¢ø FM ãÄõ ´Ä¢Ôõ, AM ãÄõ ´Ç¢Ôõ ÀÃôÀôÀθ¢ýÈÉ. FM ãÄõ þÂíÌõ Å¡¦É¡Ä¢Â¢ý ´Ä¢ÀÃôÒ ÀñÀ¨Ä ´Ä¢ÀÃôÀ¡Ìõ. 

8 °üÚô§ÀÉ¡Å¢ø (Fountain pen) ¯ûÇ ¨Á, ²Èį̀È ¾£÷óРŢ𼠿¢¨Ä¢ø, «¾¢¸Á¡¸ ¦ÅÇ¢§Â ¦¸¡ðÎÅÐ ²ý ?
§ÀÉ¡ Óû (nib), ¨Á¨Âò §¾ì¸¢ ¨ÅìÌÁ¢¼õ, ¨Á¨Â ÓûÙìÌî ¦ºÖòÐõ ÅÆ¢ ¬¸¢Â ãýÚõ §ÀÉ¡Å¢ý Ó츢ÂÁ¡É À̾¢¸Ç¡Ìõ. §ÀÉ¡¨Åô ÀÂýÀÎò¾¢ ±ØÐõ §À¡Ð, Ü÷¨ÁÂ¡É §ÀÉ¡ ÓûÇ¢ý À¢Ç× ÅƢ¡¸ ¨Á ¸º¢óÐ ¾¡Ç¢ø ±ØÐõ Å¡öôÒ ¯ñ¼¡¸¢ÈÐ. ¨Á §¾í¸¢ÔûÇ þ¼ò¾¢Ä¢ÕóÐ ¨Á ¦ÅÇ¢§ÂÚžɡø ¯ñ¼¡Ìõ ¸¡Ä¢ þ¼ò¾¢ø ¸¡üÚ ¿¢ÃõÀ¢Å¢Îõ. þ¾É¡ø ¨Á §¾ì¸¸ò¾¢Öõ, ¦ÅÇ¢§ÂÔûÇ ÅÇ¢ Áñ¼Äò¾¢Öõ ²üÀÎõ ¸¡üÈØò¾ §ÅÚÀ¡Î ºÁý ¦ºöÂôÀθ¢ÈÐ. ¸¡üÚ ¯û§Ç ¦ºøžüÌ Åº¾¢Â¡¸ §ÀÉ¡ ÓûÇ¢ý ¿ÎÅ¢ø ´Õ º¢Ú Ð¨Ç þÕôÀ¨¾Ôõ ¸¡½Ä¡õ. ¨Á §¾ì¸¸ò¾¢Ä¢ÕóÐ ¨Á ¦ÅÇ¢§ÂÈ ¦ÅÇ¢§ÂÈ, «ùÅ¢¼ò¾¢ø ¿¢ÃõÒõ ¸¡üÈ¢ý ¦¸¡ûÇÇ×õ Á¢Ì¾¢Â¡¸¢ì¦¸¡ñ§¼ ¦ºøÖõ. ´ÕÅ÷ §ÀÉ¡¨Åô À¢ÊòÐ ±Ø¾¢ì ¦¸¡ñ§¼ þÕìÌõ§À¡Ð, «Å÷ ¨¸ Å¢Ãø¸Ç¢ý ÝÎ ¯û§Ç þÕìÌõ ¸¡ü¨ÈÔõ ÝÎÀÎòÐõ. ¨Á §¾ì¸¸ò¾¢ø ¦ÀÕÁÇ× ¨ÁÔõ, µÃÇ× ¸¡Ä¢ þ¼Óõ «ùÅ¢¼ò¾¢ø ¸¡üÚõ þÕìÌõ§À¡Ð §ÁüÜȢ ¦ÅôÀò¾¢É¡ø ¯ñ¼¡Ìõ Å¢¨Ç× Á¢¸ Á¢¸ì ̨ȧÅ. ¬É¡ø º¢È¢¾Ç× ¨ÁÔõ ¦ÀÕÁÇ× ¸¡Ä¢ þ¼Óõ «ùÅ¢¼ò¾¢ø ¦ÀÕÁÇ× ¸¡üÚõ ¿¢ÃõÀ¢ þÕìÌõ§À¡Ð, ¦ÅôÀò¾¢É¡ø ¸¡üÚ Å¢Ã¢Å¨¼Ôõ. þ¾ý Å¢¨ÇÅ¡¸, ¨Á ¯ó¾¢ò ¾ûÇôÀðÎ §ÀÉ¡ ÓûÇ¢ý ÅƢ¡¸ º¢ó¾¢ì ¦¸¡ð¼ò ÐÅíÌõ. Á¢¸î º¢È¢¾Ç§Å ¨Á þÕìÌõ§À¡Ð «¾¢¸Á¡¸ ¨Á ¦¸¡ðÎÅÐ þ¾ý ¸¡Ã½Á¡¸§Å. 


À Á¢Ç¸¡¨Â ¾¢ýÈ Å¡Â¢ø ¯ñ¼¡Ìõ ¸¡Ãò¨¾ þÉ¢ôÒô Àñ¼õ ±ùÅ¡Ú ¾½¢ì¸¢ÈÐ ?
À Á¢Ç¸¡¨Â ´ÕÅ÷ ¸ÊòÐò ¾¢ýÈ×¼§É, «Å÷ ¿¡Å¢ø «¨Áó¾¢ÕìÌõ ͨÅÂÕõÒ¸û (taste buds) ¸¢Ç÷¨¼¸¢ýÈÉ; ¸¡Ã ¯½¨Åò ¾¢ýÈ ¦ºö¾¢ ¿ÃõÒò ÐÊôÒ¸û (nere impulses) ãÄõ ã¨ÇìÌ «ÛôÀôÀθ¢ÈÐ. þ¾É¡ø ²üÀÎõ ¸¡Ã ¯½÷ þÉ¢ô¨Àò ¾¢ýÀ¾ý ãħÁ¡ «øÄÐ ÌÇ¢÷ó¾ À¡Éí¸¨Ç «ÕóОý ãħÁ¡ ¿£ì¸ôÀθ¢ÈÐ «øÄР̨Èì¸ôÀθ¢ÈÐ. þ¾üÌ þÃñÎ ¸¡Ã½í¸¨Çì ÜÈÄ¡õ. ӾġÅÐ ¸¡Ã½õ, ¸¡Ãò¨¾ò ¾¢ýÈ Å¡Â¢ø º÷츨à §À¡ýÈ þÉ¢ôÒô Àñ¼í¸û Àð¼×¼§É, ²ü¸É§Å ÌÈ¢ôÀ¢ð¼Å¡Ú ͨÅÂÕõÒ¸û ¸¢Ç÷ÔüÚ, ¿ÃõÒò ÐÊôÒ¸û ãÄõ þÉ¢ôÒ ¾¢ýÈ ¦ºö¾¢ ã¨ÇìÌ «ÛôÀô Àθ¢ÈÐ; ±É§Å þÉ¢ôÒî ͨÅÔ½÷× ¸¡Ã ¯½÷¨Å Áí¸ ¨ÅòРŢθ¢ÈÐ. «Îò¾ ¸¡Ã½õ, À¡ø, ¾Â¢÷ §À¡ýÈ ¿£÷Áô ¦À¡Õð¸¨Ç ¯ñ¼×¼§É, ¿¡Å¢ø ¯ñ¼¡Ìõ °üÚ¿£Ã¢ÖûÇ §Å¾¢ô ¦À¡Õð¸û, ͨÅÂÕõÒ¸¨Ç ¸¢Ç÷¨¼Âî ¦ºöÐ ÓýÒ ¦º¡ýÉ Ó¨ÈôÀÊ ¸¡Ã ¯½÷¨Åò ¾½¢ì¸¢ýÈÉ. 

¬üÈ¢ý ¿ÎôÀ̾¢Â¢ø ¦ºøÖõ ¿£Ã¢ý Å¢¨Ã×ò ¾ý¨Á (speed) Üξġ¸×õ, þÕ ¸¨Ã¸Ç¢ý «Õ§¸ ¦ºøÖõ ¿£Ã¢ý Å¢¨Ã×ò ¾ý¨Á Á¢¸ì ̨ÈÅ¡¸×õ þÕôÀÐ ²ý ?

¾ñ½£÷ ´ðÎó ¾ý¨Á/À¨ºò ¾ý¨ÁÔ¨¼Â ´Õ ¿£÷Áô ¦À¡Õû. þ¾ý ̽ ¿Äý¸û Á¢¸×õ ¦¾Ç¢Å¡É¨Å. ¬üÈ¢ý þÕ ¸¨Ã¸¨Ç ´ðÊ þÕìÌõ ¾ñ½£÷, ¸¨Ã¸Ù¼ý ²üÀÎõ ¯Ã¡öÅ¢ý ¸¡Ã½Á¡¸ þÂì¸õ ̨ÈóÐ ²Èį̀È ¿¢¨ÄÂ¡É ¾ý¨Á¢ø þÕôÀ¾¡¸ì ¸Õ¾Ä¡õ. Á¡È¡¸ ¬üÈ¢ý þÕ ¸¨Ã¸¨Ç Å¢ðΠŢĸ¢ þÕìÌõ ¿£Ã¢ø §ÁüÜȢ ¯Ã¡ö× ²ÐÁ¢ø¨Ä ±ýÀ¾¡ø ¬üÈ¢ý ¿ÎôÀ̾¢Â¢ø µÎõ ¿£÷ Å¢¨ÃóÐ ¦ºøÖ¸¢ÈÐ. ±É§Å¾¡ý ¬üÈ¢ý ¸¨Ã¸Ç¢ý «Õ§¸ ¦ºøÖõ ¿£¨ÃÅ¢¼, ¿ÎôÀ̾¢Â¢ø ¦ºøÖõ ¿£÷ Å¢¨ÃóÐ µÎ¸¢ÈÐ.
þÕ쨸¢ø þÕóÐ ±Øõ§À¡Ð, ¿¡õ ÓýÀì¸õ º¡öó¾Å¡Ú ¸¡¨Ä ¯ó¾¢ì¦¸¡ñÎ ±Øó¾¢ÕôÀÐ ²ý ?

´Õ ¦À¡ÕÇ¢ý ®÷ôÒ ¨ÁÂõ (center of gravity) «¾ý «ÊôÀ̾¢Â¢§Ä§Â Å¢Øõ§À¡Ð «ô¦À¡Õû ¿¢¨Ä¡¸ þÕìÌõ. ±É§Å¾¡ý ´Õ ¦À¡Õû ÀÃó¾ «ÊôÀ̾¢Ôõ, «¾É¡ø «¾ý ®÷ôÒ ¨ÁÂõ ÒÅ¢ìÌ «Õ¸¢Öõ þÕìÌõ§À¡Ð, «ô¦À¡Õû ¿¢¨Ä¡¸ þÕ츢ÈÐ.

þÕ쨸¢ø «Á÷óÐ þÕìÌõ ÁÉ¢¾É¢ý ®÷ôÒ ¨ÁÂõ «Åý ¦¿ïÍô À̾¢Â¢ø þÕìÌõ. «¾É¡ø «Åý ÓýÀì¸õ º¡öóÐ, ¸¡¨Ä ¯ó¾¢ ±Øõ§À¡Ð ®÷ôÒ ¨ÁÂõ ¸¡Ä¢ý «ÊôÀ̾¢Â¢ø þÕìÌÁ¡Ú À¡÷òÐì ¦¸¡ûÇôÀθ¢ÈÐ. ±É§Å¾¡ý ÁÉ¢¾É¡ø ¸£§Æ ŢơÁø ±Øó¾¢Õì¸ þÂÖ¸¢ÈÐ. §ÁüÜȢ «î¦ºÂø ¾ýÉ¢Âì¸Á¡¸, «É¢î¨ºÂ¡¸, ±ùÅ¢¾ ÓÂüº¢ÔÁ¢ýÈ¢, Á¢¸×õ þÂøÀ¡¸ ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ ±ýÀ¾¨É ¿¡õ «È¢§Å¡õ. 

¦¾¡¨Ä측ðº¢ò ¾¢¨Ã¢ø ‘º¢É¢Á¡Š§¸¡ô’ À¼í¸¨Çò ¾¢¨Ã¢Îõ§À¡Ð «ÅüÈ¢ý «¸Äõ ̨ÈóÐ ¸¡½ôÀÎŧ¾ý ?

º¢É¢Á¡Š§¸¡ô À¼í¸¨Ç ±ÎôÀ¾üÌ ¯Õ¨Ç ÅÊŢĨÁó¾ ¸ñ½¡Ê Å¢ø¨Ä (lens) ¦À¡Õò¾ôÀ𼠾ɢŨ¸Â¡É ´Ç¢ôÀ¼ô ¦ÀðʨÂô (cam±ra) ÀÂýÀÎòÐÅ÷. þ¾¢ø ±Îì¸ôÀÎõ À¼õ «øÄÐ ¯Õ (image) ¿£Çõ Á¢ÌóÐõ, «¸Äõ ̨ÈóÐõ «¨ÁÔõ. þ¾É¡ø ¯ÕÅ¢ý Á¢Ì¾¢Â¡É ÀÃôÒ À¼ò¾¢ø À¾¢Å¡¸¢ÈÐ. þùÅ¡Ú ±Îì¸ôÀð¼ º¢É¢Á¡Š§¸¡ô À¼í¸¨Ç «Ãí̸Ǣø ¾¢¨Ã¢ÎžüÌ ¯Õ¨Ç ÅÊŢĨÁó¾ Áü¦È¡Õ Å¢ø¨Ä ÀÂýÀÎò¾ôÀθ¢ÈÐ. þ¾ýãÄõ ¿£ÇÅ¡ðÊø «¨Áó¾ À̾¢, ¯ÂÃÅ¡ðÊø «¨Áó¾ À̾¢¨ÂÅ¢¼ Á¢Ì¾¢Â¡¸ ¯Õô¦ÀÕì¸õ (magnify) ¦ºöÂôÀθ¢ÈÐ. À¼ò¾¢ý ¿£ÇÅ¡ð¼ô À̾¢, ¯ÂÃÅ¡ð¼ô À̾¢¨Â Å¢¼ þÃñ¼¨Ã Á¼íÌ «¾¢¸Á¡¸ «¨ÁóÐûÇÐ. ±É§Å º¢É¢Á¡Š§¸¡ô À¼ò¨¾ ¾¢¨ÃÂÃí̸Ǣø ¾¢¨Ã¢ÎžüÌõ ¿£Ç «¸Ä Å¢¸¢¾í¸û 2.5: 1 ±ýÈ Å¨¸Â¢ø «¨Áó¾ º¢ÈôÒò ¾¢¨Ã¸û ÀÂýÀÎò¾ôÀθ¢ýÈÉ. ¬É¡ø ¦¾¡¨Ä측ðº¢ò ¾¢¨Ã¢ø ¿£Ç «¸Ä Å¢¸¢¾í¸û §Áü¸ñ¼ Å¢¸¢¾ò¾¢ø þøÄ¡Áø þÕôÀ¾¡ø º¢É¢Á¡Š§¸¡ô À¼ò¾¢ý «¸Äõ, ÓØò ¾¢¨Ã¢Öõ ¦¸¡ñÎÅà þÂÄ¡Áø, ̨ÈÅ¡¸ì ¸¡ðº¢ÂǢ츢ÈÐ.

 8வளி அடுப்பைப் (gas stove) பற்றவைக்கும்போது உருளைகளில் (cylinders) அடைக்கப்பட்டுள்ள நீர்மப் பெட்ரோலிய வளி (liquefied petroleum gas-LPG) எவ்வாறு தீப்பற்றிக்கொள்ளாமல் இருக்கிறது? 

8உயர் அழுத்த மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளில் இருந்து ஒரு வகை ஒலி உண்டாவது ஏன்?

உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்பது உண்மையே. இவ்வொலி உண்டாவதற்கு கம்பியில் செல்லும் மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள தந்திகளில் தடையுண்டாகும்போது ஒலி எழும்புவதை நாம் அறிவோம். கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக ஒத்ததிர்வுக்கு (Resonant vibration) ஆட்படுகின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் கேட்கிறது

8மின்னணு வளிமத் தீப்பொறிக் கருவியை (Electronic gas lighter) இயக்கும் போது, கருவியின் நுனிப்பகுதியில் கை வைத்தால் மின் அதிர்ச்சி (shock) ஏற்படுவது ஏன்?

தீப்பொறிக் கருவியில் உண்டாகும் பொறி உயர் அழுத்த மின்சாரத்தால் (high voltage electricity) உண்டாக்கப் பெறுகிறது. மேற்கூறிய கருவியில் அழுத்த மின்னியல் படிகம் (Piezo electric crystal) பயன்படுத்தப் பெறுகிறது. கருவியின் முன்பக்கத்திலுள்ள குமிழை (Knob) அழுத்தினால் படிகமும் அழுத்தப்பெற்று அதனால் மின் அழுத்தம் (Voltage) உண்டாகிறது. கருவியினுள் அமைந்துள்ள மின்னணுச் சுற்றினால் (Electronic circuit) இம்மின்னழுத்தம் மேலும் பெருக்கமடைந்து நுனிப்பகுதியில் அமைந்துள்ள இரு மின்முனைகளுக்கு (Electrodes) இடையே உள்ள சிறு சந்தில் செல்லும்போது மிகவும் திறன் வாய்ந்த தீப்பொறி உண்டாகிறது. அவ்வாறின்றி, குமிழை அழுத்தும்போது கருவியின் நுனியில் கைவிரலை வைத்தால், மின்னூட்டம் தீப்பொறியை உண்டாக்காமல், மாறாகக் கைவிரல் வழியே பாய்ந்து மின் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

8மிகப் பெரிய ஒலியைக் கேட்கும்போது நாம் கண்களைச் சிமிட்டுவது ஏன்?
மிகப் பெரிய ஒலியை, அல்லது பேரிரைச்சலைப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. இத்தகைய ஒலி நமது செவி நரம்புகள் ஊடே நாம் விரும்பாத தூண்டல்களை (Impulses) உண்டாக்குகிறது; மேலும் இதன் தொடர்ச்சியாக உடலுக்கு ஏதோ அபாயம் உண்டாகப் போகிறது என்ற ஓர் எச்சரிக்கையும் நமது நரம்பு மண்டலத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அபாயத்தின் அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் கண்கள் உடனே மூடிப் பின்னர் திறக்கின்றன; அதாவது கண்கள் சிமிட்டுகின்றன. இ•து ஓர் அனிச்சைச் செயல் (Reflex action); உணர்வு நரம்புகளுக்கும் (Sensory nerves) இயக்க நரம்புகளுக்கும் (Motor nerves) இடையே நடைபெறும் நேரடிச் செய்திப் பரிமாற்றத்தின் மூலம் இச்செயல் நடைபெறுகிறது. இயக்க நரம்புகள் செய்தி வந்தவுடனே மூளையுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் உடனடியாக இந்த அனிச்சைச் செயலை மேற்கொள்ளுகின்றன.

8சாதாரண நிலையில் ஓடத் துவங்காத தானியங்கி வாகனம், பின்னாலிருந்து தள்ளினால் ஓடத் துவங்குவது ஏன்?
வாகனத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு பொத்தானை அழுத்தினால், துவக்கும் மோட்டார் (Starter Motor) என அழைக்கப்படும் மின் மோட்டார் இயங்குகிறது. மோட்டாரின் இயக்கத்தினால் பொறியிலுள்ள (Engine) வணரி(Crank) திரும்பி, எரிபொருளின் எரியூட்டுதல் சுழற்சி (Combustion cycle) துவங்குகிறது. மின்மோட்டார் இவ்விதமாக இயங்காவிடிலோ, அல்லது மின்கல அடுக்கில் (Battery) திறன் குறைந்திருந்தாலோ வாகனம் இயங்க மறுக்கும். பொறியிலுள்ள பல்வேறு உந்துதண்டுகள்(Pistons) தமது இறுதி நிலையில் இருப்பினும் வாகனம் இயங்க மறுக்கலாம். இத்தகு நிலைகளில் வணரியை எப்படியாவது திருப்பிவிட்டால் பொறியும் அதைத் தொடர்ந்து வாகனமும் இயங்கத் துவங்கும். இச்செயலை பற்சக்கர (Gear) இழுவையுடன் இணைக்கப்பெற்ற நிலையில் வாகனத்தைத் தள்ளுவதன் மூலம் எளிதாக நிறைவேற்றலாம். வாகனத்தைத் தள்ளுவதனால் சக்கரங்கள் சுழல்கின்றன; இச்சுழற்சி பற்சக்கர அமைப்பையும் தாக்கிச் சுழல்விக்கிறது; பற்சக்கர அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள வணரித் தண்டும் (Crank shaft) இதனால் திரும்பப்பெற்றுப் பொறியை இயங்கச் செய்கிறது. எனவேதான் வாகனத்தைப் பின்னாலிருந்து தள்ளிப் பொறியை இயக்குவிக்கிறோம். வாகனம் பற்சக்கர அமைப்பில் சேராமல் இருப்பின் பொறியை இயக்குவிக்க முடியாது. ஏனெனில் அந்நிலையில் சக்கரங்கள் வணரித் தண்டுடன் சேர்ந்து சுழலாமல் தாம் மட்டுமே சுழன்று கொண்டிருக்கும். இதனால் வாகனம் ஓடாமல் சக்கரங்கள் மட்டுமே சுழலும்

ளி அடுப்பைப் பற்றவைத்தவுடனே, அதிலுள்ள வளிப்பொருள், உலையைச் (burner) சுற்றியுள்ள காற்றுடன் கலப்பதால் உடனே தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது. தேவையான அளவு காற்று கலக்காவிட்டால் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டு எரியும் நிகழ்ச்சியும் நடைபெறாது. உருளையின் வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதாலும், உருளையையும் அடுப்பையும் இணைக்கும் குழாயினுள் காற்று நுழையும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் நீர்மப் பெட்ரோலிய வளி தீப் பிடித்துக்கொள்வது பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. அடுத்து உருளையின் வாய்ப்பகுதியில் உள்ள சீரியக்கி (regulator) நீர்மப் பெட்ரோலிய வளியை வெளியே செல்ல அனுமதிக்குமே ஒழிய வெளியே உள்ள காற்றை உருளையின் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால்தான் உருளையில் அடைக்கப்பட்டுள்ள வளி தீப்பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கமுடிகிறது. மேலும் வளி தீப்பிடிப்பதற்கு அதன் சில மூலக்கூறுகளின் வெப்ப நிலையை மிகுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகவே தீக்குச்சி அல்லது தீக்கொளுவியினால் (lighter) தீப்பொறிகளை உண்டாக்கி வளியை விரைந்து தீப்பிடிக்கச் செய்யவேண்டியுள்ளது. 

8இனிப்பு மாத்திரைகள் சர்க்கரையைப் போன்ற இனிப்பையே தந்தாலும் குறைவான கலோரி (calorie) ஆற்றலையே பெற்றிருப்பது எவ்வாறு?

இனிப்பு மாத்திரைகளுக்கு மட்டுமின்றி வேறு பல கூட்டுப்பொருள்களுக்கும் (compounds) கூட சர்க்கரையைப் போன்றும், அதை விடக் கூடுதலாகவும் இனிப்புச் சுவை இருப்பதுண்டு. சர்க்கரைப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொண்டால் வளர்சிதை மாற்றத்தின்போது (metabolism) கூடுதலான கலோரி ஆற்றலைத் தந்து அவை உடலில் கூடுதலான கொழுப்பு சேர்வதற்கு வழி வகுத்துவிடும். அதிகக் கொழுப்பு சேர்வது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பது நாம் அறிந்ததே. சாக்கரின் (saccharine) போன்ற கூட்டுப்பொருள்கள் சர்க்கரையைவிடக் கூடுதலான இனிப்புச் சுவையைத் தந்தாலும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படாததால் அவை பூஜ்யம் கலோரி ஆற்றலையே தரும். பெரும்பாலும் இத்தகைய சாக்கரின் கலந்த இனிப்பு மாத்திரைகளையே நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துகின்றனர். குறைந்த கலோரி ஆற்றலுள்ள அதே நேரத்தில் தேவையான இனிப்புச் சுவையும் கொண்ட வேறு சில இனிப்பு மாத்திரைகளும் உள்ளன. அசெஸ¤ல்·பாம்-கே (acesulfam-K) போன்றவை வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகாமல் அதே நேரத்தில் தேவையான இனிப்புச் சுவையையும் தரும்.

8நீரினால் கண்ணாடி ஈரமாவதுபோல் பாதரசத்தால் ஏன் ஈரமாவதில்லை?

ஈரமாதல் நிகழ்ச்சியானது திரவம் மற்றும் அது தொடர்புகொள்ளும் பரப்பு ஆகியவற்றிடையே நிலவும் ஒட்டு விசை (adhesive force) மற்றும் ஈரமாகும் திரவத்தின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசை (cohesive force) ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டையே பெரிதும் பொறுத்துள்ளது. திரவத்தின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையே அதன் பரப்பு இழுவிசையின் (surface tension) அளவுக்கும் காரணம் எனலாம். பாதரசம் கண்ணாடிப் பரப்பை ஈரமாக்க இயலாமைக்கு முக்கிய காரணம் அதன் பரப்பு இழுவிசை மிக அதிகமாக இருப்பதே; தண்ணீரின் பரப்பு இழுவிசையைவிட பாதரசத்தின் பரப்பு இழுவிசை ஆறு மடங்கு அதிகம். மேலும் பாதரசத்தின் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை பாதரசத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே நிலவும் ஒட்டு விசையைவிட மிகவும் வலிமை வாய்ந்ததாகும். இதன் காரணமாகவே பாதரசம் கண்ணாடியின் மீது பரவுவதும் இல்லை, அதன் பரப்பில் ஒட்டுவதுமில்லை. அதே நேரத்தில் தண்ணீருக்கும் கண்ணாடிப் பரப்புக்கும் இடையே நிலவும் ஒட்டு விசையானது தண்ணீர் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிக வலிமையானது; இதன் விளைவாகவே நீர் கண்ணாடியுடன் ஒட்டிக்கொள்வதோடு, அதன் பரப்பின் மீது விரைந்தும் பரவுகிறது. 

8ஊற்றுப் பேனாவின் (fountain pen) முள்ளில் (nib) பிளவு இருப்பது ஏன்?

ஊற்றுப் பேனாவைக் கொண்டு எழுதும்போது அதன் மை, முள்ளின் வழியாக வெளியேறி தாளில் கோடுகளாகவும், எழுத்துக் குறிகளாகவும் பரவி உலர்ந்து போகிறது. மை சீராகவும், மென்மையாகவும் வெளியேறுவதால் எழுத்துக் குறிகளும் ஒரே சீராக அமைகின்றன. பரப்பு இழுவிசை (surface tension) மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவை காரணமாக வெளியேறும் மை பேனாவின் முன் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் நாக்கிற்கு மேல் வந்து, பேனா முள்ளின் நடுவேயுள்ள சிறு துளையருகே சேர்கிறது. எழுதும்போது பேனாவைச் சற்று அழுத்தவேண்டியுள்ளது; அப்போது முள் இரண்டாகப் பிளவுபட்டு, சிறு குழாய்/நுண் புழை (capillary) போன்ற அமைப்பு உருவாகி அதன் வழியே மை வெளியேறுகிறது. இவ்வெளியேற்றத்திற்கான விசை நுண்புழை விசை எனப்படும். முள்ளிலுள்ள பிளவு, குழாய் போன்றும் குழாயினுள் இருக்கும் தடுக்கிதழ் (valve) போன்றும் பணிபுரிந்து மை ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இப்பிளவு மட்டும் இல்லாவிடில் வெளியேறும் வாய்ப்பே உண்டாகாமல், மை, பேனாவிற்கு உள்ளேயேதான் தங்கி இருக்கும். 

8அடுப்பைசோடியம் உலோகத்தை நீரில் இடால் தீப்பற்றிக் கொள்வது ஏன்?

வசோடியம் உலோகம் நீருடன் சேரும்போது வேதியியல் வினையின் மூலம் ஹைடிரஜன் வாயுவும் பெருமளவு வெப்பமும் வெளி வருகின்றன. இவ்வினையைக் கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் அறியலாம். இதற்கு வெப்ப உமிழ் வினை (exothermic reaction) என்று பெயர்.
2Na + 2HO H2 + 2NaOH 
சோடியம் + நீர் ஹைடிரஜன் + சோடியம் ஹைடிராக்ஸைடு
இவ்வேதியியல் வினையின் மூலம் வெளிவரும் பெரும் வெப்பம், எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் இயல்புடைய ஹைடிரஜன் வாயுவை எரியூட்டிவிடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு சோடியம் உலோகத்தை மண்ணெண்ணெய், பென்சீன் போன்ற கரைப்பான்களில்(solvents) வைப்பது வழக்கம். இவற்றில் சோடியம் நீருடன் சேர்ந்து வினைபுரியும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. எனவே தீப்பிடித்துக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை.
8மரபுப் பொறியியல் (genetic engineering) என்றால் என்ன?
தங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகள் மரபுவழிக் குறைபாடின்றி உருவாக, பல பெற்றோர்கள் மருத்துவ ஆலோசனையும், உதவியும் பெறுவது தற்போது பெருகி வருகின்றது. அரிவாள் செல் சோகை (sickle cell anemia) போன்ற நோய்கள் மரபுவழிக் குறைபாட்டினால் உண்டாவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் மரபுவழி நோய்கள் உண்டாகாமல் தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறையே மரபுப் பொறியியலாகும். குறையுடைய மரபணுக்களை (genes), குரோமோசோம்களில் (chromosomes) இருந்து நீக்கி இயல்பான மரபணுக்களை பதிலுக்குப் பொருத்த முடியும் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.
8கண்ணாடிப் பொருட்கள் நொறுங்கும் பண்பைப் (brittleness) பெற்றிருப்பதற்கு என்ன காரணம்?

ஒரு பொருள் மென்மை அல்லது கெட்டித்தன்மை பெற்றிருப்பதும், நொறுங்கும் தன்மை அல்லது கடினத் தன்மை பெற்றிருப்பதும் அப்பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்துள்ளன மற்றும் பிணைக்கப்பட்டுள்ளன என்பவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் பிணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளாமல் இடம் பெயரும் தன்மை பெற்றிருக்குமானால், அப்பொருள் தன் மீது செலுத்தப்படும் விசையைத் தாங்கிக் கொண்டு உடையாமாலிருக்கும். எடுத்துக்காட்டாக, உலோகத்தின் ஒரு பகுதி தகைவுக்கு (stress) உட்படும்போது, அப்பகுதியிலுள்ள அணுக்கள் வேறிடத்திற்கு இடம் பெயர்ந்து அங்குள்ள அணுக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்நிகழ்ச்சி உருத்திரிவு (deformation) எனப்படுகிறது. மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள பிணைப்பு, நெகிழ்ச்சித் தன்மையுடனிருந்தால் மட்டுமே இ·து இயலும்.

கண்ணடியைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் -- அதாவது சிலிகான், உயிர்வளி, போரான், சில உலோகங்கள் ஆகியவற்றின் அணுக்கள்_மிகவும் உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வணுப் பிணைப்புகள் ஏதேனும் அழுத்ததின் காரணமாக சிதைந்து போனால், அவ்வணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் இணைந்து மீண்டும் பிணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள் எளிதில் உடைந்து விடுகிறது. ஆனால் உலோகங்களையோ தகடுகளாகவும், கம்பிகளாகவும் மாற்ற முடிகிறது.

8அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாம் வியர்ப்பது ஏன்?






வியர்வை வருவதற்குக் காரணம், நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே (sweat glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச் சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள், அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (stimuli) உட்படக் கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின் வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை. அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் கூட நாம் வியர்ப்பதற்குக் காரணம் இதுவே.

8ஓடும் பேருந்தில் பயணம் செய்யும்போது பின்புறம் இருப்பவர்கள், முன்புறம் அமர்ந்திருப்பவர்களை விட மிகுந்த குலுக்கலுக்கு ஆட்படுவதேன்?

பேருந்தின் உடற்பகுதி வலிமையும் உறுதியும் கொண்ட சட்டத்தின் (frame) மீது அமைக்கப்படுகிறது. இச்சட்டம் பாதையின் நிலைமைகட்கு ஏற்றாற்போல், கடுமையான வளைவு (bending) மற்றும் முறுக்கு (twisting) விசைகளுக்கு (forces) உள்ளாகிறது. பேருந்தின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள இரு சக்கரத் தாங்கி இருசுகளும் (wheel bearing axles) சட்டத்திற்கான நெம்பு மையங்களாகப் (fulcrums) பணியாற்றுகின்றன எனலாம். பாதையில் அமைந்துள்ள மேடு பள்ளங்களின் மேல் முன் சக்கரங்கள் ஓடும்போது பின் சக்கரங்கள் நெம்பு மையமாகப் பணியாற்றுகிறது. அதனால் பேருந்தின் சட்டம் பின் இருசினை மையப்படுத்தி நகர்கிறது. இது இரண்டாம் வகை நெம்புகோலின் கையைப் (arm of the second class lever) போன்று அமைகிறது எனலாம். இந்நிலையில் பேருந்தின் சட்டம் அல்லது நெம்புகோலின் கை இயல்பான கிடை நிலையில் இருந்து மேலும் கீழும் அதிகமாக அசைவதில்லை. இதே மாதிரி பின் சக்கரங்கள் மேடு பள்ளங்களின் மீது விரைந்து ஓடும்போது முன் சக்கரங்கள் நெம்புமையமாகப் பணியாற்றுகிறது. ஆனால் பேருந்தில், பின்புற பயணியர் இருக்கைகள் பெரும்பாலானவை இருசுக்குப் பின்னால் அமைந்துள்ளன. இந்நிலையில் பேருந்துச் சட்டம் மூன்றாம் வகை நெம்புகோலின் கை போல் அமைந்து விடுகிறது. இதன் விளைவாக பின்புறச் சட்டமும், பின்புற இருக்கைகளும் அதிகமான மேல்-கீழ் இடப்பெயர்ச்சிக்கு (vertical displacement) உட்படுகின்றன. எனவே பின்புறம் அமர்ந்துள்ள பயணிகள் முன்புறம் அமர்ந்திருப்போரைவிட அதிகமான குலுக்கலுக்கு ஆட்படுகின்றனர். மேலும் பயணிகளின் குலுக்கல் ஓரளவுக்கு பேருந்து ஓடும் வேகத்தையும் பொறுத்தது. பேருந்து விரைந்து ஓடினால் அதிகமான குலுக்கலும், மெதுவாக ஓடினால் குறைவான குலுக்கலும் உண்டாகும். வேகத்தடையின் (speed breaker) மீது பேருந்து ஓடும்போதும் இந்நிலை உண்டாவதை நாம் அறிவோம்

8கெட்டித்தன்மை வாய்ந்த காய்கறிகள் வெந்தவுடன் எப்படி மென்மையாகி விடுகின்றன? 

பழுக்காத காய்கள் மிகவும் கெட்டித்தன்மை வாய்ந்தவை; அதன் உயிரணுக்கள் (cells) உறுதியாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம். உயிரணுக்களின் புறப் பகுதிகளிலுள்ள செல்லுலோஸ் (cellulose) என்ற மாவுப்பொருளும், பெக்டின் (Pectin) என்ற மாவுப்பொருளும் சேர்ந்து உயிரணுக்களைக் கெட்டியாக இணைக்கின்றன.

வெப்பத்தினால் காய்கள் வேகும்போது, பெக்டின் நெகிழ்வடைந்து செல்லுலோஸுடன் ஏற்பட்டிருந்த இணைப்பு முறிவடைந்து விடுகிறது. எனவே உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்த உயிரணுக்கள் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து போகின்றன. பெரும்பாலான காய்கறிகள் வெந்தபின் மென்மைத் தன்மை அடைவதற்கு இதுவே காரணம். 
உருளைக் கிழங்கைப் பொறுத்தவரை, வேகவைத்த பின்னர் அதன் உள்ளிருக்கும் ஸ்டார்ச்சுத் துகள்கள் நெகிழ்வடைந்துவிடும். இந்த ஸ்டார்ச்சுத் துகள்கள் வெந்நீரின் தொடர்பால் விரிவடைவதுடன் மென்மைத் தன்மையும் பெறுகின்றன.
பழங்களில் மென்மைத்தன்மை எவ்வாறு உண்டாகிறது என்றால் காய்கள் பழுக்கும்போது, உயிரணுக்களில் உள்ள நொதிகள் (enzymes) கெட்டித்தன்மைக்குக் காரணமான பெக்டின் பொருளைச் செரித்து விடுவதால் மென்மைத் தன்மை ஏற்படுகிறது.
8சூடு படுத்தப்படும் துறுவேறா எஃகுப் (stainless steel) பாத்திரங்களில் திட்டுத் திட்டாக வண்ணப் பூச்சுகள்(Color patches) தோன்றுவது ஏன்?

துறுவேறா எஃகு என்பது ஒரு உலோகக் கலவை (alloy). இக் கலப்பு உலோகத்தில் இரும்பைத் தவிர்த்து குரோமியம், கரி, நிக்கல், மாலிபிடீனம் போன்றவையும் கலந்துள்ளன. இப்பாத்திரம் சூடாக்கப்படும் போது காற்றில் கலந்துள்ள உயிர்வளி (oxygen) வினைபுரிந்து பாத்திரத்தில் கலந்துள்ள உலோகங்களின் ஆக்சைடுகள் உருவாகின்றன. இந்த ஆக்சைடுகள் ஒளியின் குறுக்கீட்டினால் பாத்திரப் பரப்பில் திட்டுத்திட்டான பல்வேறு வண்ணப் பூச்சுகளாகப் பரவுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் வண்ணம், பாத்திரம் சூடாக்கப்படும் வெப்ப நிலையையும், அதனால் உண்டாகும் ஆக்சைடு படலங்களின் தடிமனையும் பொறுத்ததாகும். எடுத்துக்காட்டாக பாத்திரத்தின் மீது படியும் வண்ணப்பூச்சு, வெப்பநிலை 145 செ.கி.இல் இருக்கும் போது மஞ்சள் நிறமும், 230 செ.கி.இல் பழுப்பு நிறமும், 260 செ.கி.யில் ஊதா நிறமும், 300 செ.கி.இல் நீல நிறமும், 350 செ.கி.இல் நீலம் கலந்த பச்சை நிறமும் கொண்டிருக்கும்.

8ஓசோன் (ozone), காற்றைவிட கனமானதாக இருப்பினும், அது காற்று வெளிக்கு (atmosphere) மேலே இருப்பது ஏன்?
காற்று வெளியில் மேலே செல்லச் செல்ல, ஓசோன் பல்வேறு அளவுகளில் அமைந்துள்ளது. புவிக்கு அருகிலும் கூட மிகக் குறைந்த அளவில் அது உள்ளது. இருப்பினும் காற்று வெளியில் தரையிலிருந்து 25 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை உயரமுள்ள பகுதியில் ஓசோன் மிக அதிகமாகச் செறிந்திருக்கிறது. இப்பகுதிக்கு ஓசோன் படலம் என்று பெயர். மூன்று உயிர்வளி (oxygen) அணுக்கள் ஒருங்கிணையும் போது ஒரு ஓசோன் மூலக்கூறு உருவாகிறது. சாதாரணமாக உயிவளி அணுக்கள் இரண்டிரண்டாக இணைந்து உயிர்வளி மூலக்கூறுகளாக விளங்கும். காற்று வெளியின் மேற்பகுதியில் உயிர்வளி மூலக்கூறுகள் கதிரவனின் ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சினால் தாக்குறும் போது அவை பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்து ஓசோன் படலத்திற்குக் கீழே புவிக்கு அருகிலும் உயிர்வளி மிகுதியாக உள்ளது என்பது உண்மையே. கதிர் வீச்சினால் உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாகப் பிளவுறும் வாய்ப்பும் அதனால் இங்கும் ஓசோன் மூலக்கூறுகள் உருவாகும் நிலைமையும் ஏற்படாதா என ஐயம் எழலாம். கதிரவனின் கதிர்கள் காற்று வெளியில் நீண்ட தூரம் வரவேண்டியிருப்பதால் ஆற்றல் குறைந்து அதனால் உயிர்வளி மூலக்கூறுப் பிளவும் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறும். இதனால் ஓசோன் மூலக்கூறுகளும் குறைவாகவே உருவாகின்றன. மேலும் ஓசோன் படலத்திலும் கூட உருவாகும் ஓசோன்கள் அவ்வாறே இருப்பதில்லை. கதிர்வீச்சின் காரணமாக ஓசோன் மூலக்கூறுகளும் அணுக்களாகப் பிளவுற்று உயிர்வளி மூலக்கூறுகளாக மாறுகின்றன. மீண்டும் உயிர்வளி மூலக்கூறுகள் பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உருவாகின்றன. இவ்வாறு ஓசோன்/உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாக மாறிமாறிப் பிளவுற்று, ஒருங்கிணைவதால் ஓசோன் படலத்தில் ஓசோன் செறிவு ஏறக்குறைய சமமான அளவில் மாற்றமின்றி அமைவதுடன், அது ஓசோன் படலத்திற்குக் கீழே இறங்கிச் செல்வதும் தவிர்க்கப் படுகிறது. 

8இரு கண்ணாடிப் பலகைக்களுக்கிடையே மெல்லிய நீர்ப்படலம் இருந்தால், அவை இரண்டையும் ஏன் எளிதாகப் பிரிக்க முடிவதில்லை?
இரு கண்ணாடிப் பலகைகட்கிடையே மெல்லிய நீர்ப்படலம் இருக்கும்போது அங்கிருக்கும் காற்று முழுமையாக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் இரு கண்ணாடிப் பலகைகளின் மேலும் கீழும் அமைந்துள்ள இயல்பான காற்று வெளி அழுத்தம் (normal atmospheric pressure) கண்ணாடிப் பலகைகள் இரண்டையும் அழுத்துவதால் அவை உறுதியாக இணைந்து விடுகின்றன. [காற்று வெளியின் அழுத்தம் ஒரு ச.செ.மீ.க்கு ஒரு கிலோ கிராம் என்பதை நினைவிற் கொள்க] அதே நேரத்தில் ஒரு சிறு தூசு அல்லது மெல்லிய மயிரிழை கண்ணாடிப் பலகைகட்கிடையே இருந்து அதன் காரணமாக சிறிதளவே காற்று பலகைகட்கிடையே அடைபடும் வாய்ப்பு ஏற்பட்டாலும், வெளியே உள்ள காற்றுவெளி அழுத்ததை அது சமன் செய்துவிடும். இதனால் கண்ணாடிப் பலகைகள் இரண்டையும் எளிதாகப் பிரித்துவிடக் கூடும். கண்ணாடிப் பலகைகளின் பரப்பு சமமற்றதாக, சொர சொரப்புடன் இருந்தால், சாதாரண நிலையில் அவை இரண்டுக்குமிடையே மெல்லிய காற்றுப்படலம் அமைந்திருக்கும். ஈரமான கண்ணடிப் பலகைகளைச் சேர்க்கும்போது, அவற்றின் பரப்புகட்கிடையே உள்ள காற்று, நீர்ப்படலத்தால் வெளியேற்றப்பட்டு விடுகிறது. இதனால் கண்ணாடிப் பலகைகள் இரண்டும் பிரிக்க இயலாமல் உறுதியாக இணைந்து விடுகின்றன. மிகவும் வழவழப்பான கண்ணாடிப் பலகைகள் (மூக்குக் கண்ணாடி வில்லை போன்றவை) இரண்டை ஈரமில்லாத நிலையில் ஒன்றிணைத்தாலும், அவை இரண்டும் உறுதியாக இணைந்துவிடும். அவை மிகவும் வழவழப்புடன் இருப்பதாலும், அவற்றிற்கிடையே சிறிதளவு காற்றும் புக வாய்ப்பில்லாததாலும், ஈரமற்ற நிலையிலும் கூடப் பிரிக்கமுடியாதபடி உறுதியாகப் பிணைந்து இருப்பதைக் காணலாம்.

8கைக்கடிகாரத்திலுள்ள மணிக்கற்கள் (jewels) என்பவற்றின் பயன் யாது?

சாதாரணக் கைக்கடிகாரத்தில் (wrist watch) நூறுக்கும் மேற்பட்ட நுண்பகுதிகள் உள்ளன. அவற்றின் நீண்ட உழைப்பும், உறுதித்தன்மையும் ஒன்றோடொன்று உராயாமல் பணியாற்றுவதில்தான் அமைந்துள்ளன. உராய்வு, தேய்மானம் ஆகியவற்றைத் தடுப்பதற்கு, முக்கியமான பாகங்கள் தாங்கிகளில் (bearings) பொருத்தப்பட்டிருக்கும். இத்தாங்கிகள் செயற்கைச் சேர்மானத்தாலான (synthetic) மாணிக்கக் கற்கள் (rubies), நீல மணிக் கற்கள் (sapphires) வகையைச் சேர்ந்தவை. கைக்கடிகாரத்தில் சாதாரணமாக 17 முதல் 25 வரை மணிக் கற்கள் அமைந்திருக்கும்.

8மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?

இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறைbioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி, வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசி·பெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது. இந்த லூசி·பெரின், லூசி·பெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்

.8தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை?
ாவிசைப்பலகயில் எழுத்துகள் தட்டெழுத்தரின் வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன; அதாவது மிகுதியாகப் பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் தட்டெழுத்தரின் விரல்களுக்கு எட்டும் வண்ணம் அமைந்திருப்பதைக் காணலாம். அதிக அளவில் புழங்கும் பெரும்பாலான எழுத்துகள் விசைப் பலகையின் மத்திய வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன; இவ்வரிசை எழுத்துகள் மீதுதான் தட்டெழுத்தரின் விரல் நுனிகள் சாதாரண நிலையில் படிந்திருக்கும். 
ஆனால் தற்போது புழக்கத்தில் இருந்துவரும் குவெர்ட்டி (qwerty) ஆங்கில விசைப்பலகை, முழுத் திறன் பெற்றதென்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக அதிக அளவு பயன்படும் e என்ற ஆங்கில எழுத்து மத்திய வரிசையில் இல்லை; மேலும் இரு கைகளின் சுண்டுவிரல்களும் கடுமையாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. இவையெல்லாம் தற்போதுள்ள விசைப் பலகையின் சில குறை பாடுகள். இக்குறைகளையெல்லாம் நீக்கி, புதுவகை விசைப்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தட்டெழுத்தர்களின் ஆர்வமின்மையாலும், பழைய முறையே பழக்கப்பட்டு விட்டதாலும், திருத்தம்பெற்ற புது விசைப்பலகைகள் நடைமுறைக்கு வரமுடியாமற் போய்விட்டன.

8இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. இந்நிலையில் இரத்த வங்கிகளில் நீண்ட காலத்திற்கு எவ்வாறு இரத்தத்தைச் சேமித்து வைக்க இயலுகிறது?

மனித உடலில் ஓடும் இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்; பின்னர் அவை அழிந்து விடுகின்றன. ஆனால் உடனடியாக, எலும்பிற்குள்ளிருக்கும் மெல்லிய கொழுப்பிலிருந்து புதிய சிகப்பணுக்கள் உற்பத்தியாகி இழப்பை ஈடு செய்கின்றன. சாதாரண காயம் பட்ட ஒருவரின் உடலிலிருந்து வெளியேறும் இரத்தம் உடனடியாக உறைந்து போவதைக் காணலாம். இதனை நொதிவினை (enzymatic reaction) என்பர். குருதிக் கொடையாளி ஒருவர் தரும் இரத்தம் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட (sterilized) பையில் சேமிக்கப்படுகிறது. இப்பையினுள் சைட்ரேட் உப்புகள் இருப்பதால் இரத்தம் உறைவது தவிர்க்கப்படுகிரது. மேலும் சிறந்த பாதுகாப்பையும் ஊட்டத்தையும், சேமிக்கப்படும் இரத்தத்திலுள்ள அணுக்களுக்கு அளிக்கும் பொருட்டு, அடெனின் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் (dextrose) ஆகியனவும் பையினுள் சேர்க்கப்படுகின்றன. அடுத்து இரத்தம், கொடையாளியிடமிருந்து பெறப்பட்டவுடனே குளிபதனப்பெட்டியில் (4_6 செ.கி. அளவில்) வைக்கப்படுவதாலும், உறைவது தவிர்க்கப்படுகிறது. மேலும் இரத்தம் வங்கியில் சேமிக்கப்பட்டவுடனே, உடலில் அது நிகழ்த்தும் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுவதால் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உரியதாக விளங்குகிறது
.
8சிலந்தி தான் பின்னும் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?

சிலந்திப் பூச்சியின் பின்புறம், மெல்லிழைகளை உருவாக்கும் மூன்று உறுப்புகளைக் கொண்ட தொகுதி ஒன்று உள்ளது; இதன் மூலம் இழைகளை உற்பத்தி செய்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்கும் வலையை சிலந்தி உருவாக்குகிறது. பூச்சிகள் பறக்கும்போது இவ்வலையில் தட்டுப்பட்டால், அவற்றின் பறக்கும் செயல் தடைபடுகிறது; அவ்வாறு தடைபட்டவுடனே வலையில் இருக்கும் சிலந்தி முட்டிமோதி தன் நச்சுக் கொடுக்குகளைப் பயன்படுத்தி அப்பூச்சிகளைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளுகிறது. பூச்சிகளுக்கோ, வலையில் மோதி தமது பறக்கும் செயல் தடைபட்டவுடனே, ஏதும் தோன்றாமல் திகைப்படைந்து, சிலந்தி விரித்த வலையில் எளிதாகச் சிக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் சிலந்தி தான் பின்னிய வலையின் பரப்பு முழுவதையும் நன்கு அறிந்திருப்பதால், அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளுகிறது. சில சிலந்திகள் கோந்து போன்ற திரவத்தை வெளியிடுவதால், பறக்கும் பூச்சிகள் அதில் எளிதாக ஒட்டிக் கொள்ளுகின்றன. 

8ஒரு குறிப்பிட்ட திசையில் வானொலிப் பெட்டியைத் திருப்பி வைக்கும்போது, குறிப்பிட்ட வானொலி நிலைய நிகழ்ச்சிகள் நன்றாகக் கேட்பது ஏன்?

ெரும்பாலான கையடக்க வானொலிப் பெட்டிகளில் ஆன்டெனாக்கள் (antennas) பெட்டிக்குள்ளேயே அமைந்துள்ளன; அவற்றின் பணித்திறன் திசைக்கேற்றவாறு மாறக் கூடியது. வானொலிப் பெட்டிகளில் பொதுவாக இருவகை ஆன்டெனாக்கள் உண்டு; மத்திய அலை (medium wave) ஒலிபரப்பை உள்வாங்கும் சுருள் கம்பி ஆன்டெனா (coil antenna), சிற்றலை ஒலிபரப்பை எற்கும் வளைகம்பி ஆன்டெனா (loop antenna) என்பனவே அவை. குறைவான இடத்தையே அடைத்துக் கொள்ளும் என்பதால், இவ்வகை ஆன்டெனாக்களே கையோடு எடுத்துச் செல்லக்கூடிய வானொலிப் பெட்டிகளில் பயன்படுத்தப் பெறுகின்றன. ஆனால் இந்த ஆன்டெனாக்கள் ஒலிபரப்பு அலைபரப்பியின் (broadcasting transmitter) திசைக்கேற்றவாறு இருக்குமானால் சிறப்பான முறையில் வானொலி நிகழ்ச்சிகளை நாம் கேட்க இயலும். சுருள்கம்பி ஆன்டெனா என்பது ஒரு கம்பியினால் இரும்புத் தண்டைச் சுற்றி செய்யப்படுவதாகும். இவ்வகை ஆன்டெனாவின் அச்சு, ஒலியலை சமிக்கைகளுக்குச் செங்குத்தாக இருக்குமானால் வானொலியின் ஒலிபரப்பு நன்றாகக் கேட்கும்; மாறாக ஆன்டெனாவின் அச்சும் ஒலியலைகளும் ஒரே தளத்தில் இணையாக இருக்குமானால் ஒலிபரப்பு வலிமையின்றி மிகவும் மென்மையாகக் கேட்கும். வளைகம்பி ஆன்டெனா என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முழு கம்பி வளையங்களாலானது. இவ்வகை ஆன்டெனாக்களில் ஒலிபரப்பின் வன்மை மென்மைகள் மேற்கூறிய சுருள்கம்பி ஆன்டெனாக்களுக்கு நேர் எதிரான முறையில் அமையும்; அதாவது சமிக்கைகளுக்கு இணையான தளத்தில் இருந்தால் வலிமையாகவும், செங்குத்தாக இருப்பின் மென்மையாகவும் இருக்கும். இக்காரணங்களாலேயே நிலையங்களின் ஒலிபரப்புக்கு ஏற்ற வகையில் வானொலிப் பெட்டியின் திசையை மாற்றி எத்திசையில் சிறப்பாக ஒலிபரப்பைக் கேட்க இயலுகிறதோ, அத்திசையில் வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைக் கேட்கிறோம்
8மரத்தாலான பொருட்களைத் தொட்டால் கதகதப்பாகவும், உலோகப் பொருட்களைத் தொட்டால் சில்லென்றிருப்பதும் ஏன்?
ஒரு பொருளைத் தொட்டால் அது கதகதப்பாக இருப்பதும், சில்லென்றிருப்பதும், நம் உடலிலுள்ள தோல் பரப்பின் வெப்பம் அப்பொருளில் பரவுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும். நமது தோலிலிருந்து வெப்பம் வெளியேறுகையில், தோலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் வெப்ப உணர்வு நரம்பிலுள்ள உயிர் அணுக்களுக்கு சில்லென்ற உணர்வு தோன்றுகிறது. உலோகம் மிகவும் சிறந்ததொரு வெப்பக் கடத்தியாகும். எனவே அதனைத் தொடும்போது கையிலுள்ள வெப்பம் வெளியே கடத்தப்பெற்று நமக்குச் சில்லென்ற உணர்வு தோன்றுகிறது. குளிர் காலத்தில் நமது சுற்றுச்சூழலின் வெப்ப அளவு நமது உடலின் வெப்ப அளவை விடக் குறைவாக இருக்கும். அப்போது உலோகத்தாலான பொருட்களைத் தொட்டால் மிகவும் சில்லென்ற உணர்வு உண்டாகிறது. ஆனால் மரத்தாலான பொருட்கள் அரிதில் வெப்பக் கடத்திகள்; உலோகங்களைப் போன்று வெப்பத்தை அவ்வளவாகக் கடத்துவதில்லை; எனவேதான் மரப் பொருட்களைத் தொட்டால் கைத்தோலின் வெப்பம் வெளியேறாமல் கதகதப்பான உணர்வு ஏற்படுகிறது. 

8கண்கள் சிலருக்கு நீல நிறமாகவும், சிலருக்குப் பழுப்பாகவும், வேறு சிலருக்குக் கருமையாகவும் இருப்பது ஏன் ?

மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலானின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலானின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும். வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.

8கண்ணாடிக் குவளையிலிருக்கும் திரவத்தை மெதுவாக ஊற்றும்போது சுவர்ப் பகுதியில் ஏன் வழிந்து செல்லுகிறது ?

மெல்லிய சுவர்ப்பகுதியை உடைய கண்ணாடிக் குவளையிலிருந்து பால் போன்ற திரவத்தை மெதுவாக ஊற்றும்போது, குவளையின் விளிம்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் திரவப்படலம் (layer) திரவத்தின் மேற்பகுதிப் படலத்தைவிட விரைந்து வெளியேறுகிறது; இதன் விளைவாக பெர்னோலிஸ் கோட்பாட்டின்படி (Bernoulli’s principle) திரவத்தின் உட்படலத்தில் அழுத்தம் மிகுதியாகிறது. இவ்வழுத்தத்தின் விளைவாக சுவர்ப் பகுதியை ஒட்டிய திரவப் படலம் அழுத்தப் பெற்று திரவம் சுவர்ப் பகுதியிலேயே வழிந்து செல்கிறது. ஆனால் குவளையிலிருந்து திரவத்தை விரைந்து ஊற்றினால், திரவம் முழுவதுமாக வெளியேறும் போது அதன் உட்படல அழுத்தமும், வெளிப்படல அழுத்தமும் அதிக வேறுபாடின்றி ஏறக்குறைய சமமாகவே இருக்கும். எனவே திரவம் சுவர்ப் பகுதியில் ஒட்டிக் கொண்டு வழியாமல் வெளியேற இயலுகிறது. குவளையின் மேற்பகுதியில் சற்று பிதுங்கிய உதடு போன்ற அமைப்பு இருக்குமானால் மேற்கூறியவாறு சுவரில் வழிவது முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டு திரவத்தை எளிதாக ஊற்ற முடியும் என்பது நாம் அறிந்ததே.

8மட்டையால் வீசப்பெற்ற நெட்டிப் பந்து (shuttle cock) காற்றில் பறக்கும்போது முன்னும் பின்னும் சுழல்வது ஏன்?

நெட்டிப்பந்தில் இரு பகுதிகள் உள்ளன; ஒன்று இலேசான இறகுகளால் அமைந்த கூம்பு வடிவப் பகுதி; அடுத்தது நெட்டி அல்லது தக்கையாலான (cock) அரைக்கோள வடிவப் பகுதி.. சில நெட்டிப் பந்துகளில் மேற்கூறிய இரு பகுதிகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப்படுவதும் உண்டு. பந்தாட்ட மட்டையினால் (racket) அடித்து வீசப்படும் போது நெட்டிப்பந்தின் அரைக்கோளப் பகுதியே அடிபடும் பகுதியாகும்; இருப்பினும் பந்தின் கூம்புப் பகுதியே காற்றில் முதலில் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட்ட உடனே நெட்டிப்பந்து காற்றில் சுழலத் துவங்குகிறது. இதற்கு என்ன காரணம்? இறகுகளாலான கூம்புப் பகுதியைவிட தக்கைப் பகுதி எடை சற்றுக் கூடுதலாக இருப்பதும், நெட்டிப்பந்தின் வடிவமைப்பும் இந்நிகழ்விற்கான காரணங்கள் எனலாம். எப்படி எனக் காண்போம். கூம்பு வடிவத்தின் திறந்த வாய்ப் பகுதியில் விரைந்து வந்து வீசும் காற்று நெட்டிப் பந்தை அதன் போக்கிலிருந்து திரும்பச் செய்கிறது; அத்துடன் சற்று எடை கூடுதலான நெட்டிப் பகுதியின் உந்து விசையும் (momentum) பந்தின் விரைந்த சுழற்சிக்கு உறுதுணையாக அமைகிறது. இதன் விளைவாக தொடர்ந்து காற்றினிடையே பந்து சுழன்று சுழன்று செல்ல முடிகிறது. ஒவ்வொரு முறையும் மட்டையினால் அடித்து பந்தை வீசும் போதும் மேற்கூறிய முறையில் பந்து காற்றில் சுழன்ற வண்ணம் பறக்கிறது
.
8ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய கண்ணாடிப்பலகையின் விளிம்புப் பகுதிகள் பச்சை நிறத்தில் காணப்படுவது ஏன்?

பல்வேறு கலவை வண்ணக்கூறுகள் (tints) கண்ணாடியில் உண்டாவதற்கு அதிலுள்ள மாசுப் பொருட்களே காரணம். Fe என்ற அயனிகள் (ions) கண்ணாடியில் இருப்பதால் பச்சை நிறம் தோன்றுகிறது. கண்ணாடியை உற்பத்தி செய்யும்போது அதன் கச்சாப் பொருட்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தாமல் விட்டு விடுவதே இதற்குக் காரணம். எனவே தரக் குறைவான கண்ணாடியிலேயே இப்பச்சை நிறம் காணப்படுகிறது எனலாம். அத்தகைய கண்ணாடிப் பலகையின் விளிம்பின் பார்வைக்கோட்டில் கலவை வண்ணக்கூறுகள் சற்று மிகுதியாகக் காணப்படுவதும் பச்சை நிறத் தோற்றத்திற்குக் காரணமாகும். அடுத்து, பல்வேறு நிறமுடைய கண்ணாடிப் பலகைகளை உற்பத்தி செய்வதற்கு சில மாசுப் பொருட்களை, தேவைக்கேற்ப வேண்டுமென்றே சேர்ப்பதும் உண்டு.

8மரத்தைத் துண்டாக்குவதற்குக் கூர்மையான கத்தி ஏன் பயன்படுவதில்லை? அரத்தை மட்டுமே பயன்படுத்துவது ஏன்?

கூர்மையான கத்தியைக் கொண்டு மரத்தின் மெல்லிய தோற்பகுதியை வேண்டுமானால் சீவி எடுக்க முடியுமே தவிர, அதனைத் துண்டாக வெட்ட முடியாது. இதற்குக் காரணம் மரத்தின் இழைகள் மிகவும் கடினமானவை. ஆனால் அரமானது உராய்வதற்கும், தேய்ப்பதற்கும் உரிய வகையில் செய்யப்பட்டிருப்பதால், வலிமை மிக்க மர இழைகளை அறுத்து, மரத்தைத் துண்டாக்க இயலுகிறது. அரத்தின் பற்கள் ஒன்று இடப்புறம் சாய்ந்தும் மற்றொன்று வலப்புறம் சாய்ந்தும் மாறி மாறி அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அரத்தை முன்னும் பின்னும் இழுத்து அறுக்கும்போது அறுபடும் இடத்தில் மரம் சிறு சிறு துணுக்குகளாகச் சிதைக்கப்பெற்று மரத்தூள் விழுவதைக் காணலாம். அரத்தின் தகடு இவ்வாறு வெட்டும் இடத்தில் உண்டாகும் கால்வாய்ப் பகுதி, தகட்டைவிட அகலமாக இருப்பதால் அரம் முன்னும் பின்னும் எளிதாகப் போய் வருவதற்கு வசதியாக இருக்கிறது. இம்முறையில் அரத்தைக்கொண்டு மரம் இரு துண்டுகளாக வெட்டப் படுகிறது.

8மழைகாலத்தில் நாம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏன்?

நுரையீரல் நம் உடலில் இருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது; உப்புப் பொருட்கள் தோல் மூலமும், நைட்டிரஜன் கழிவுகள் சிறுநீர் மூலமும் வெளியேற்றப்படுகின்றன. மிகுதியான தண்ணீர் வியர்வையாகவும், சிறுநீராகவும் உடலை விட்டு வெளியேறுகிறது. கோடைக்காலத்தில் வெப்ப மிகுதியின் காரணமாக, அதிக அளவு நீரைப் பருகுகிறோம். அதில் பெரும்பகுதி வியர்வையாக வெளியேறி உடனே ஆவியாகி விடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில்லை. மழை மற்றும் குளிர்காலங்களில் வெப்ப அளவு மிகவும் குறைந்திருப்பதால் வியர்வை வருவது குறைவு; வரும் வியர்வை ஆவியாதலும் குறைவு. இதனால் அருந்தும் தண்ணீரை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமல் அதிகம் சிறுநீர் கழிப்பதன் மூலமே வெளியேற்ற வேண்டியுள்ளது. எனவேதான் குளிகாலத்திலும், மழை நாட்களிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறோம்.

8துருவேறா எ·கில் (stainless steel) இரும்பு கலந்திருந்தாலும், அது ஏன் காந்தத்தால் கவரப்படுவதில்லை?

ஒரு உலோகத்தின் காந்த அணுக்களை அல்லது காந்த மூலக்கூறுகளை “வெபர் தனிமங்கள்(Weber elements)” என்பர். அவை ஒன்றுக்கொன்று இணையாகவும், ஒழுங்குமுறையோடும், அவற்றின் வட துருவம் தென் துருவத்தையும், தென் துருவம் வட துருவத்தையும் நோக்கி அமையும் போது அவ்வுலோகம் காந்தமாக மாறுகிறது அல்லது காந்தத்திற்குரிய பண்புகளைப் பெறுகிறது. மேற்கூறிய நிலைகளில் இருந்து மாறும்போது, உலோகம் காந்தப் பண்புகளை இழந்து விடுகிறது. இரும்பின் வெபர் தனிமங்கள் மின்புலத்தை அல்லது மற்றொரு காந்தத்தின் தொடர்பினால் தமக்குள் காந்தப் புலத்தை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை. எனவேதான் இரும்பு ஓர் இரும்பியல் காந்தப் பொருள் (Ferro-magnetic material) எனப்படுகிறது. ஓரளவு காந்தத்தன்மையை உடைய அல்லது காந்தத் தன்மையே இல்லாத பொருட்களும் கூட உண்டு. எடுத்துக்காட்டாக குரோமியம் (chromium) காந்தத் தன்மைக்குரிய பண்புகளுள் எதையும் கொண்டிராதது; எனவே இவ்வுலோகத்தை எதிர்-இரும்பியல் காந்தப் பொருள் (anti-ferromagnetic material) என்பர். 
துருவேறா எஃகு பெருமளவு இரும்பைக் கொண்டிருப்பது; இருபது விழுக்காடு குரோமியமும், சிறிதளவு நிக்கல் மற்றும் கரியும் கலந்துள்ளன. துரு பிடிப்பதையும், அரிமானம் உண்டாவதையும் தடுக்கும் பொருட்டு குரோமியம் கலக்கப்படுகிறது. எனவே துருவேறா எஃகு என்பது இரும்பு, குரோமியம், நிக்கல், கரி ஆகியவை கலந்துள்ள கலப்புலோகம் என்பது தெளிவாகிறது. இப்பல்வேறு உலோகங்களின் வெபர் தனிமங்கள் ஒன்றொடொன்று சிதறிப் பரவுவதால் நிகரக் காந்தத்தன்மை பூஜ்யம் என்ற நிலைக்கு வந்து விடுகிறது. எனவே துருவேறா எஃகு காந்தப் பண்புகளை முழுமையாக இழந்து விடுவதால் மற்றொரு காந்தத்தால் கவரப்படுவதில்லை.

8கொதிக்கும் நீரை ஊற்றினால் மெல்லிய கண்ணாடிக் குவளையை விட தடித்த குவளை எளிதில் உடைந்து விடுவது ஏன் ?

கண்ணாடி ஓர் அரிதில் வெப்பக் கடத்தி; அதாவது, கண்ணாடியில் வெப்பம் மிக மெதுவாகச் செல்லும். எனவே கொதிநீரைத் தடித்த கண்ணாடிக் குவளையில் ஊற்றினால் அதன் தடித்த சுவர்ப்பகுதியில் வெப்பம் மிக மெதுவாகப் பரவுகிறது. இதன் விளைவாக குவளையின் உட்பகுதியில் உள்ள வெப்பமானது வெளிப்பகுதியில் பரவியிருக்கும் வெப்பத்தைவிட மிக அதிகமாக இருக்கும்; அதாவது வெப்பம் சமச்சீரற்றுப் பரவுகிறது எனலாம். இதனால் சுவர்ப் பகுதியில் சமமற்ற விரிவாக்கம் நிகழ்ந்து உள்ளழுத்தம் உண்டாகிக் கண்ணாடியில் விரிசல் ஏற்படுகிறது. மாறாகக் கொதிநீரை மெல்லிய கண்ணாடிக் குவளையில் ஊற்றும்போது, அதன் சுவர்ப் பகுதி தடிமன் குறைந்து இருப்பதால் வெப்பம் ஓரளவு சமச்சீராகப் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே கண்ணாடியில் விரிசல் உண்டாவது தவிர்க்கப்படுகிறது. தற்போது பைரக்ஸ் (Pyrex) எனும் புதுவகைக் கண்ணாடி புழக்கத்தில் வந்துள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக சுவர்ப் பகுதியில் சமச்சீரற்ற விரிவாக்கம் நிகழாமல் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இவ்வகைக் கண்ணாடியைக் கொண்டு செய்யப்படும் குவளைகள் வெப்பநிலை உயர்வு காரணமாக எளிதில் உடைவதில்லை.

8மிதிவண்டி ஓட்டுபவர் வண்டி ஓடும் பொழுதைவிட துவக்கத்தில் மிதிவண்டிக்கட்டையை (pedal) அழுத்தமாக மிதிப்பது ஏன ?



இயக்கம் பற்றிய நியூட்டனின் முதல் விதிப்படி "வெளிப்புற விசையன்று செயல் பட்டால் ஒழிய எந்தப் பொருளும் தனது அமைதி நிலையையோ (state of rest) அல்லது ஒரே நேர்க்கோட்டில் சீரான இயக்கத்திலுள்ள தனது இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்." அதாவது எப்பொருளும் தன்னிச்சையாக தானே தனது அமைதி நிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளுவதில்லை. பொருளின் இவ்வடிப்படைத் தன்மையை "நிலைமம் (inertia)" என்பர். இதனால் அமைதி நிலையிலுள்ள பொருள் இயங்குவதையோ, அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் பொருள் நிறுத்தப்படுவதையோ மேற்கூறிய நிலைமப் பண்பு எதிர்க்கிறது எனலாம். அமைதி நிலையில் இருக்கும் மிதிவண்டியை அல்லது எந்த ஒரு வாகனத்தையும் இயக்க வைப்பதற்கு நிலைமத் தன்மையிலிருந்து அதனை விடுவிக்க வேண்டும். இதற்குக் கூடுதலான விசை தேவைபடுகிறது. வண்டி ஓடத் துவங்கியபின் எவ்விதக் கூடுதல் விசையும் தேவைப்படாமல் தொடர்ந்து எளிதாகச் செல்லும். எனவேதான் மிதிவண்டி ஓட்டுபவர் துவக்கத்தில் மிதிவண்டிக் கட்டையை அழுத்தமாக மிதிக்க வேண்டியுள்ளது. பின்னர் குறைந்த அழுத்தத்துடன் மிதித்தாலும் வண்டி எளிதாக ஓடுகிறது. 

8உணர்வகற்றும் மருந்து (anesthesia) நோயாளியின் நனவு நிலையை எவ்வாறு நீக்குகிறது? 



உணர்வகற்றும் மருந்தின் வாயிலாக நோயாளிக்கு உண்டாகும் மயக்க நிலை ஆழ்ந்த உறக்கத்திற்கு இணையானது எனலாம். நம்மை நனவு நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமான சிறப்பு உயிரணுத் தொகுதிகள் நமது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. இது நுண்வலைப்படிவ அமைப்பு (reticular formation) எனக் கூறப்படுகிறது. மூளையின் பிற பகுதிகளுடன் இவ்வமைப்பு கொண்டிருக்கும் தொடர்பைப் பொறுத்தே நமது நனவு நிலை அமைகிறது. வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி சோடியம், பொட்டாசியம் அயனிகளைப் (ions) பரிமாறிக் கொள்வதின் வாயிலாக உண்டாகும், சிறு அளவிலான மின் உற்பத்தியின் காரணமாக மேற்கூறிய உயிரணுக்கள் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ள இயலுகிறது. உணர்வகற்றும் மருந்தானது மூளையின் உயிரணுப் பரப்பில் மேற்கூறிய வேதி வினையையும் மின் தொடர்பையும் தடை செய்கிறது. இதன் காரணமாகவே நனவு நிலை நீங்கி மயக்க நிலை உண்டாகிறது.

8பிளாஸ்டிக்கினாலான வாளி, குவளை போன்ற பொருட்கள் நீண்ட பயன்பாட்டிற்குப் பின்னர் நொறுங்கி உடைந்து போவது ஏன் ?

பிளாஸ்டிக்கில் நொறுங்கும் தன்மை (brittleness) இரண்டு காரணங்களால் உண்டாகிறது. அன்றாடம் புழக்கத்திலுள்ள வாளி, தொட்டி, குடுவை ஆகியன பாலிவினைல் குளோரைடு(PVC) என்ற பொருளால் ஆனவை. இது மிகவும் கெட்டியானது, விறைப்பானது, எளிதில் அச்சுருவாக்கம் செய்ய முடியாதது. தேவையான உருவத்தில் அச்சுவார்ப்பு (mould) செய்யும் பொருட்டு இதனுடன் மென்மையூட்டும் (plasticizer) பொருள் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்பட்டு அச்சு வார்க்கப்பட்ட பொருட்கள் சொரசொரப்பற்று, நயமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். இப்பிளாஸ்டிக் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும், வெந்நீர் மற்றும் சலவைத் தூள் ஆகியவற்றின் தொடர்பினாலும், வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றாலும் அவற்றிலுள்ள மென்மையூட்டியானது நீக்கப்படுகிறது. இதனால் நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போய் பிளாஸ்டிக் பொருள் நொறுங்கி உடையத் துவங்குகிறது. இ·து ஒரு காரணம். மற்றொரு காரணம் என்னவெனில் புற ஊதாக் கதிர்வீச்சு (ultra violet radiation) அல்லது மிகு வேதி வினையுள்ள ஒசோன் (ozone) என்ற நீல நிற வளியின் தொடர்பு ஆகியவற்றால் பிளாஸ்டிக் பொருளில் தோன்றும் கட்டவிழ்ப் படிக மூலிகள் (free radicals)ஆகும். இவற்றாலும் பிளாஸ்டிக் பொருட்கள் நொறுங்கவும் உடைந்து போகவும் கூடும்
8விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?



விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7, ------------ 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில் ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக் குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப் பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜ்யம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக் கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

8கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன்?



இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் - அது துப்பாக்கிக் குண்டோ, சாதாரணக் கருங்கல்லோ எதுவாயினும் அவற்றில் -- ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kinetic energy) உள்ளது; இந்த ஆற்றலை உந்தம் (momentum) என்பர். இவ்வுந்தம் பொருள் செல்லும் நேர்விரைவைப் (velocity) பொறுத்தது. அதாவது நேர்விரைவு மிகுதியாக இருந்தால் உந்தமும் மிகுதியாக இருக்கும். துப்பாக்கிக் குண்டு போன்ற எடை குறைந்த தக்கையான பொருளும் மிக விரைவாகச் செல்லும் போது அதனுடைய உந்தம், மெதுவாகச் செல்லும் எடை மிகுந்த பொருளின் உந்தத்தைவிடக் கூடுதலாக இருக்கும். துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் விரைவில் செல்வதால், அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போது, அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அதே நேரத்தில் துப்பாக்கிக் குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக்கி அதன் வழியே வெளியேறிவிடுகிறது. மாறாகக் கதவை நோக்கி வீசியெறியப்பட்ட கல் குறைந்த வேகத்தில் செல்கிறது; அது கண்ணாடிப் பலகையைத் தொடும்போது அதன் முழு உந்தமும் கண்ணாடிக்கு மாற்றப்பெறுகிறது. இவ்வாறு கல்லில் பொதிந்திருந்த முழு ஆற்றலும் கண்ணாடிக்கு மாற்றமுறுவதோடு அதன் தகைவுப் பகுதிகளிலும், அதாவது கண்ணாடி மூலக்கூறுகள் வலிமை குன்றி பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் பரவுகிறது. இதன் விளைவாகக் கல்லெறிபட்ட கண்ணாடிக் கதவுப் பகுதிகள் உடைந்து சிதறுகின்றன. 

8திரைப் படத்தில், இரு சக்கர வாகனங்கள் ஓடும்போது சக்கரத்தின் ஆரைக்கபிகள் (spokes) பின்னோக்கிச் சுழல்வது போல் தோன்றுவது ஏன்?

திரைப்படம் என்பது ஒரு திரிபுத் தோற்றம் (illusion). எனவே சக்கரத்தின் ஆரைக்கம்பிகள் பின்னோக்கிச் சுழல்வதுபோல் காட்சியளிப்பதும் ஒரு திரிபுத் தோற்றமே. இவ்வாறு காட்சியளிப்பது, சக்கரம் எவ்வளவு வேகத்தில் சுழல்கிறது என்பதைப் பொறுத்தது; இத்தகைய காட்சியை சுழல் பொருள் நோக்கு விளைவு (stroboscopic effect) என்பர். சாதாரணமாக ஒரு வினாடிக்கு இருபத்தி நான்கு படங்கள் என்ற அளவில் (திரைப்)படப்பிடிப்பு மேற்கொள்ளப்படுகிறது. படத்தை திரையிடுகையில், கண்களின் தொடர் பார்வையின் காரணமாக படம் நமக்குத் தொடர்ச்சியாகக் காட்சியளிக்கிறது. சக்கரத்தின் சுழற்சி ஒரு வினாடிக்கு இருபத்தி நான்கு என்ற அளவில் இருந்தால் திரைப்படத்தில் சக்கரம் சுழலாமல் நிலையாக இருப்பது போல் தோற்றமளிக்கும். அவ்வாறின்றி ஒரு வினாடிக்கு இருபத்தி நான்குக்குக் கூடவோ, குறைந்தோ சக்கரத்தின் சுழற்சி இருக்குமானால், சக்கரத்தின் ஆரைக்கம்பிகள் முன்னோக்கி அல்லது பின்னோக்கி ஓடுவது போல் தோன்றும். 

8இறப்புக்குப் பின்னர் மனிதர்கள் விழிக்கொடை அளிப்பது போன்று குருதிக் கொடை அளிக்க இயலாதது ஏன்?

மனித உடலிலுள்ள திசுக்களில் (tissues) இறப்பு, நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்குப் பிந்தைய இம்மாற்றங்களுக்குக் காரணம் உடல் அணுக்களில் பொதிந்துள்ள அழிவு நொதிகள் (destructive enzymes) மற்றும் நுண்ணுயிரிகள் (microbes) ஆற்றும் வினை; அடுத்த காரணம் உயிர் வாழ்வதற்கு முக்கியத் தேவைகளான உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியன நின்றுபோவது. ஆனால் இம்மாற்றங்கள் உடலின் எல்லா உறுப்புகளிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை; உறுப்புக்கு உறுப்பு இம்மாற்றங்கள் நிகழ்வதற்கான காலம் வேறுபடும். இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் குருதியில் உடனடியாக உண்டாகின்றன. சாவுக்குப்பின் இதயத்தில் குருதி ஓட்டம் நின்றுபோவதால், இறந்த உடலில் இருந்து வலிந்து குருதியை வெளிக்கொணர வேண்டும். அப்போது நுண்ணுயிரிகளின் (micro organisms) தொடர்பால் குருதி மாசடைந்து போகும். மாசடைந்த குருதியைப் பயன்படுத்த இயலாதல்லவா? இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒருவர் உடலில் குருதிக் கொடையளித்த சில நாட்களுக்குள் மீண்டும் புதுக்குருதி ஊறிவிடும். குருதிக் கொடையளிக்கும் நல்ல உள்ளம் கொண்ட பலர் உலகில் உள்ளனர்; எனவே பிணத்தில் இருந்து அதனைப் பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அடுத்து சிறுநீரகம், இதயம், விழிகள் ஆகிய உறுப்புகளில் இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் சற்று தாமதமாக நிகழும். எனவே, இறந்த உடனே அவற்றை எடுத்துத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு பதப்படுத்தி வைத்தால் வேறோர் உடலில் பொருத்த இயலும். மேலும் உயிரோடிருக்கிற ஒருவர் கண்களைக் கொடுத்தால், அது அவருக்கு நிரந்தர இழப்பாக அமைந்துவிடும். எனவே தான் இறந்தவர் உடலில் இருந்து அதனைப் பெறுகிறோம்.

8செஞ்சூடடைந்த (red hot) இரும்பு அல்லது எஃகை உடனே குளிர்வித்தால் கடினமானதாகவும், மெதுவாகக் குளிர்வித்தால் மென்மையானதாகவும் மாறுவது எவ்வாறு? 



ஒரு பொருளைச் சூடாக்கும்போது, அப்பொருளிலுள்ள அணுக்களும், மூலக்கூறுகளும் தங்களுக்குள்ளே மிகுந்த இடைவெளிவிட்டு விலகிச் சென்று விடுகின்றன. எ·கு என்பது இரும்பு கலந்த ஒரு கலப்பு உலோகம். எ·கைப் பொறுத்தவரை மூலக்கூறுகளின் வடிவ அமைப்பு, அணுக்களின் அமைப்பு ஆகியவற்றிலும்கூட வெப்பத்தின் காரணமாக மாறுதல் உண்டாகிறது. சூடாக்கப்பட்ட பொருள் மெதுவாகக் குளிர்விக்கப்படும்போது அதன் அணுக்கள் மெதுவாகத் தமது பழைய இடங்களுக்கு / நிலைகளுக்கு வந்து சேர்கின்றன. மாறாக சூடாக்கப்பட்ட பொருள் விரைந்து குளிர்விக்கப்பட்டால், அணுக்கள் தமது பழைய அல்லது இயல்பு நிலைக்குத் திரும்பிச் செல்ல இயலாமல் தகைவுக்கு (stress) உள்ளாகின்றன. இவ்வாறு தகைவுக்கு உள்ளான உருவமைவு (configuration) கொண்ட பொருள் கடினத்தன்மை பெற்றுவிடுகிறது. இதே காரணத்தால்தான் உயர் நீட்சி எஃகு (high tensile steel), விசைக்கு உட்படும்போது முறிந்து போகிறது; மாறாக தாழ் நீட்சி எஃகு (low tensile steel) முறியாமல் மெதுவாக வளைகிறது. இரும்பைப் பொறுத்தவரை, சூடான இரும்பை விரைந்து குளிர்வித்தால், அணுக்களின் அமைப்பு காரணமாக படிகக் கட்டமைப்பில் (crystal structure) மாற்றம் உண்டாகிக் கடினத்தன்மை ஏற்படுகிறது. 

8பெட்ரோலில் இயங்கும் பொறிகளை (engines) டீசலைப் (disel) பயன்படுத்தி ஏன் இயக்க முடிவதில்லை?

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் (fuels) கொண்டு இயங்கும் இரு பொறிகளும் உட்கனற்பொறிகளே (internal combustion engines). ஆயின் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை (ignition temperature) என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். அடுத்து பெட்ரோல் பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி (spark plug) ஆகும். மேலும் இப்பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் (compression ratio) குறைவு. இந்நிலையில் பெட்ரோல் பொறியில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. அடுத்து டீசல் பொறிகளில் பெட்ரோல் பொறிகளில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் பொறிகளுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.

8சில தொலைக்காட்சித் திரைகளில் உருவத்துக்குப் பின்னால் நிழலுருவம் தோன்றுவது ஏன்?


தொலைக்காட்சி சமிக்ஞைகள், (signals) ஒளிபரப்புக்காக, உயர் அதிர்வெண் கொண்ட வானொலி அலைகளைப் போன்றே செலுத்தப்படுகின்றன. இந்த அலைகள் ஆன்டெனாக்களில் சேமிக்கப்பெற்று, பின்னர் தொலைக்காட்சிப் பெட்டியினுள் இருக்கும் மின்னணு மற்றும் படக்குழாய்களால் (electronic and picture tube) படங்களாக மாற்றப்படுகின்றன. தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் சுற்றி பல அடுக்கு உயர்மாடிக் கட்டடங்கள் சூழ்ந்திருக்குமானால், முற்கூறிய மின்காந்த அலைகளை அக்கட்டடங்கள் மறிக்கும். இவ்வாறு மறிக்கப்பட்ட அலைகளையும் ஆன்டெனாக்கள் ஏற்றுக் கொள்ளுகின்றன. இந்த அலைகள் ஏற்கனவே நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சேமிக்கப்பெற்ற அலைகளைவிட ஓரளவு நீண்டிருக்கும். இவ்வலைகளால் உருவாக்கப்படும் படம் மூலப் படத்திற்குப் பின்னால் நிழலுருவமாகக் காட்சியளிக்கும்.

8ரசகுல்லா போன்ற இனிப்புத் தின்பண்டங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பது போல, உருளைக் கிழங்கு போண்டா, மசால் தோசை போன்றவை ஏன் கெடாமல் இருப்பதில்லை?



எந்த உணவுப் பொருளும் பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் போது கெட்டுப்போகும். அவ்வாறு உணவுப் பொருள்களைக் கெடாமல் காக்க பாதுகாப்புப் பொருள்களைச் (preservatives) சேர்ப்பர் அல்லது குளிர்பதனப் பெட்டியில் வைத்திடுவர். ரசகுல்லா போன்ற இனிப்புத் தின்பண்டங்கள் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதற்கு அவற்றிலுள்ள சர்க்கரைப் பாகே பாதுகாப்புப் பொருளாக அமைவதுதான் காரணம். ஆனால் இனிப்புப் பொருட்களையும் சுற்றுப்புற வெப்பநிலையில் சில நாட்கள் வைத்திருந்தால், நொதிவினை (Fermentation) காரணமாக அவையும் கெட்டுப்போகத் துவங்கும். எனவே நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க வேண்டுமெனில் குளிர்பதனப் பெட்டியில் வைப்பது சிறந்தது. போண்டா, மசால் தோசை போன்ற தின்பண்டங்களில், உருளைக் கிழங்கு, காய் கறிகள், மாவுப் பொருட்கள் ஆகியன மிகுதி; மிக எளிதாக பாக்டீரியாக்கள் சேர்ந்து இத்தகைய உணவுப் பண்டங்களைக் கெடுத்துவிடும்; மேலும் கெடாமல் இருப்பதற்கான எத்தகைய பாதுகாப்புப் பொருட்களும் இவற்றில் கிடையா. எனவேதான் இத்தகைய உணவுப் பண்டங்கள் ஒரு நாளைக்கு மேல் கெடாமல் இருப்பதில்லை.

கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருப்பது ஏன்?



தரைமட்டத்திற்குக் கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது.  மண் அரிதில் வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20-25 செ.கி. வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம்.  கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும்.  குளிர் காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு;  அந்நிலையில் கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45 செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25 செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில், கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.  

 பொதுவாக மரங்களின் தண்டுப்பகுதி உருளை வடிவத்தில்(cylindrical trunk) அமைந்திருப்பது ஏன்?



மரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத் தாவரங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறுவதற்கில்லை.  புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் நாற்கோண அல்லது சதுர வடிவிலும் அமைந்திருக்கும்.  தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால் (cells)ஆனவை; அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் (spherical) அல்லது திருகு சுருள் (helical) வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும்.  தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் (tissues) பகுதிகள் உள்ளன.  அவை முறையே மரவியம் (Xylem),பட்டையம் (Phloem) என்பன.  மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது.  பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது.  மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் (radial) ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் பொதுவாக உருளை வடிவில் அமைகிறது. 

 மின்மாற்றி (transformer) அல்லது மின்கட்டுப்படுத்தி (electric choke)ஆகியவற்றிலிருந்து சில சமயம் ஒலி உண்டாவது ஏன்?


மின்மாற்றி, மின்கட்டுப்படுத்தி ஆகிய இரண்டும் அடிப்படையில் ஓர் இரும்பு உள்ளகத்தைச் (Iron core) சுற்றி அமைக்கப்பட்ட கம்பிச் சுருள்களே.  உள்ளகம் என்பது மின்காப்புப் பெற்ற மெல்லிய இரும்புத் தகடுகளாலானது.  சாதாரண நிலையில் மின்மாற்றி அல்லது மின்கட்டுப் படுத்தியில் மாறுதிசை மின்னோட்டம் (AC) செல்லும்போது ஒலி ஏதும் உண்டாவதில்லை.  ஆனால் உள்ளகத்தின் மெல்லிய தகடுகள் உறுதியாக இணைக்கப்படாத நிலையிலும், உள்ளகத்தைச் சுற்றியுள்ள கம்பிச் சுருள் அழுத்தமாகச் சுற்றப்படாதபோதும், தகடுகளுக்கிடையேயான மின்காப்புப் பொருள் உலர்ந்து விட்டாலும் மெல்லிய ஒலி உண்டாகிறது.  முக்கியமாக கம்பிச்சுருள் ஊடே செல்லும் மாறுதிசை மின்னோட்டத்தின் அதிர்வெண்ணும் (Frequency), தளர்ந்த நிலையிலுள்ள தகடுகளின் இயல்பான அதிர்வும் ஒத்திருக்கையில் இவ்வொலி கட்டாயம் உண்டாகிறது. தகடுகளின் ஒத்ததிர்வே (Resonance) இதற்குக் காரணம்.

சோப்புக் கட்டிகள் பல நிறங்களில் இருப்பினும், அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன்?



சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (surface tension)காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது; சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை அடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப் பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் இது பொருந்தும். 

8தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் செய்ய அலுமினிய உலோகத்தை மட்டுமே பயன் படுத்துவது ஏன்?
மின்சாரத்தை எளிதில் கடத்துகிற எந்த உலோகத்தையும் ஆன்டெனாவிற்காகப் பயன் படுத்தலாம். ஆனால் அலுமினியத்தைப் பயன்படுத்துவதற்கு அதன் சிறந்த பண்புநலன்களே (Properties) காரணம். அலுமினியம் எடை குறைந்த, இலேசான உலோகமானாலும் வலிமை மிக்கது. ஆன்டெனா செய்வதற்குத் தேவையான குழாய்களாகவும், தட்டுகளாகவும் அதனை எளிதாக வடிவமைக்கலாம். இவ்வுலோகம் அரிமானத் தடுப்பு (Corrosion resistance) கொண்டது. மழை, வெயில், காற்று போன்ற இயற்கைச் சூழலுக்கு ஆட்படும் ஆன்டெனா வுக்கு இப்பண்பு மிகவும் இன்றியமையாதது. மேலும் செம்பு, பித்தளை போன்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் அலுமினியம் விலை மலிவானது. எனவேதான் இவ்வுலோகம் ஆன்டெனா செய்வதற்குப் பெரிதும் பயன்படுகிறது.

8நீண்ட தூரம் செலுத்துவதற்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் (Alternating current -- AC) பயன் படுத்துவது ஏன்?
நீண்ட தூரச் செலுத்துகைக்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது மாறுதிசை மின்னோட்டத்தின் அழுத்தத்தை (Voltage) மின் மாற்றிகளைப் (Transformer)பயன்படுத்திக் கூட்டவோ, குறைக்கவோ இயலும். எடுத்துக்காட்டாக 400,000 வோல்ட் மின்னழுத்தமுள்ள மாறு மின்னோட்டத்தை 220 வோல்ட் அழுத்தமுள்ள மின்னோட்டமாக, இறக்கு மின்மாற்றியைப் (Step down transformer) பயன்படுத்தி, வீட்டுப் பயன்பாட்டிற்காகக் குறைத்திட இயலும். அடுத்து மாறு மின்னோட்டத்தை உயர் அழுத்தத்தில் நீண்டதூரம் செலுத்தும்போது ஏற்படும் இழப்பு மிகவும் குறைவு.

8பட்டாசைப் பிரித்து அதனுள்ளே இருக்கும் வெடித்தூளை எடுத்துப் பற்றவைத்தால் ஏன் வெடிப்பதில்லை?
பட்டாசினுள் வெடித்தூள் மற்றும் வேதிப்பொருள்கள் ஒருங்கிணைக்கப்பெற்று இறுக்கமாக அடைக்கப்படுகின்றன. பட்டாசைப் பற்றவைக்கும்போது, வெடித்தூள் உடனடியாகப் பற்றிக் கொண்டு எராளமான புகை உற்பத்தியாகிறது. இதே நேரத்தில் வெடித்தூள் இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ள பட்டசினுள் மிகுந்த அழுத்தம் உண்டாகி அதன் காரணமாக பேரொலி எழும்பி வெடிச் சத்தம் உண்டாகிறது. மாறாகப் பட்டாசைப் பிரித்து வெடித்தூளைத் தனியாக எடுத்துப் பற்றவைத்தால் மிகுதியான புகை உண்டாகும் என்பது உண்மையே; ஆனால் அவ்வாறு உண்டாகும் புகை உடனடியாகக் காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அறவே இல்லாமற் போகிறது. எனவே வெடிப்பொலி ஏதும் உண்டாவதில்லை.

8நறுக்கிய ஆப்பிள் துண்டுகளைக் காற்றுப்பட வைத்தால், அவை ஆரஞ்சு நிறத்திற்கு மாறுவது ஏன்?
ஆப்பிளில் டானின் (Tannin) என்னும் கரிமச் சேர்மங்கள் உள்ளன. அவை துவர்ப்பு ஊட்டிகளாகச் (Astringent agent) செயலாற்றுபவை. பழத்திலுள்ள ஈரப்பசையை அவை நீக்கிவிடும். பருவ காலங்களுக்கு ஏற்பவும், பழத்தின் முதிர்ச்சிக்கு ஏற்பவும் டானின் அளவு பழத்தில் அமைகிறது. ஆப்பிள் பச்சையாக இருக்கும்போது டானின் அளவு கூடுதலாகவும், பழுக்கப்பழுக்க அதன் அளவு குறைவாகவும் இருக்கும். ஆப்பிளைத் துண்டாக நறுக்கும் போது, அத்துண்டுகள் மீது சுற்றுப்புறக் காற்றுப் படிகிறது; அப்போது ஆப்பிளிலுள்ள நொதிகளின் (enzymes) வினையூக்கத்தால் டானின் மற்றும் காற்றிலுள்ள உயிர்வளி இரண்டும் கலந்து ஆக்சைடுகள் உண்டாகின்றன. இந்த ஆக்சைடுகள் காரணமாகவே நறுக்கிய ஆப்பிள் துண்டுகளில் ஆரஞ்சு வண்ணம் உண்டாகிறது

8விரல் நகங்கள் வளர்வது போன்று பற்கள் ஏன் வளர்வதில்லை?
நகங்கள் வளர்வதற்கும், பற்கள் அவ்வாறு வளராததற்கும் அவற்றின் அமைப்புகளே காரணம். நகங்கள் தாவரங்களின் நுனிப்பகுதி போன்று தொடர்ந்து வளர்கின்றன. நகங்களின் அடிப்பகுதியில் அமைந்துள்ள உயிரணுக்களின் தொகுதியினால் (set of cells), உற்பத்தி செய்யப்படும் கெராடின் (Keratin) என்ற பொருள் மேற்கூறிய வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. முடி, கொம்பு, நகம் ஆகியவற்றில் இப்பொருள் உள்ளது. ஆனால் பற்களோ பல் அரும்புகளில் (tooth-buds) இருந்து தோன்றுவன. இது பூக்கள் அரும்பில் இருந்து மலர்வதை ஒக்கும். பற்சிப்பி (enamel), பல்லின் கடினமான புறப்பகுதி, பல்லின் உட்பகுதி ஆகிய பல்லின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட உயிரணுக்களின் தொகுதியினால் உருவாகுவன. குழந்தை பிறப்பதற்கு முன்பே மேற்கூறிய உயிரணுத் தொகுதிகள் உற்பத்தி செய்ய வேண்டிய பல்லின் பகுதிகள் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. குழந்தைகட்குத் தோன்றி, விழுந்து விடும் பால் பற்களாயினும் (milk teeth) சரி, பின்னர் உருவாகும் நிலைத்த பற்களாயினும் சரி மனிதர்கட்குத் தோன்றும் ஒவ்வொரு பல்லும் தனித்தனிப் பல் அரும்பில் இருந்து தோன்றுகிறது. எனவேதான் ஒரு குறிப்பிட்ட பல் விழுந்தால் மீண்டும் அது முளைப்பதில்லை. ஆனால் எலி போன்ற சில உயிரினங்களில் பல் அரும்புகள் எப்போதும் உயிர்ப்புடன் விளங்குவதால் அவற்றின் பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். பற்கள் அளவுக்கு மீறி வளர்வதைத் தடுக்கவும், பற்களை குறிப்பிட்ட அளவுக்குள் ஒழுங்காக வைத்திருக்கவும் அவ்வுயிரினங்கள் எப்போதும் எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

8ஒலிநாடாப் பதிவியில் (Tape recorder) பதிவு செய்யப்பெற்ற நமது குரல் நமக்கே புதிதாக இருப்பது ஏன்?
குரல் நாண்களில் (Vocal chords) இருந்து எழும்பி, காதுகளை அடைவதன் மூலம் நமது பேச்சை நம்மால் கேட்க முடிகிறது. இது இரு வழிகளில் நடைபெறுகிறது. காற்றலைகள் (air waves) வழியாகவும், தாடை எலும்பு, உட்செவி எலும்பு ஆகியவற்றின் அதிர்வு காரணமாகவும் நாம் பேசும் பேச்சு நம் செவியை அடைகிறது. எனவே நாம் பேசும் பேச்சொலியை மேற்கூறிய இருவகை அதிர்வுகளின் ஒருங்கிணைப்பால் நாம் கேட்கிறோம். ஆனால் பிறர் பேசும் ஒலியும், பதிவு செய்யப்பட்ட ஒலியும் மேற்கூறிய இரு வழிகளில் அல்லாமல், காற்றலைகள் வழியாக மட்டுமே நம் செவியை அடைகின்றன. எனவே பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பபடும் நமது பேச்சொலி, இயற்கையாக நாம் பேசும் ஒலியிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.

8ஒரு கண் மட்டுமே திறந்த நிலையில் ஊசித் துளையில் நூலைக் கோர்ப்பது மிகவும் கடினமாக இருப்பது ஏன்?
ஒரு கண்ணை மட்டுமே திறந்து மற்றொரு கண்ணை மூடிக்கொண்டு பார்க்கும்போது நூல் முனைக்கும், ஊசித்துளைக்கும் இடையேயுள்ள தூரத்தைச் சரியாகத் தீர்மானிக்க முடிவதில்லை. இரு கண்களையும் திறந்த நிலையில் நாம் பார்ப்பதை முப்பரும நோக்குப் பார்வை (Stereoscope vision) என்பர். ஒரு பொருளை இரு கண்களாலும் பார்க்கும்போது, அப்பொருள் முப்பருமனிலும், இயற்கைத்தன்மையிலும், சரியான தொலைவிலும் தெரியும். எனவே பொருள் எவ்வளவு தூரத்திலுள்ளது என்பதைச் சரியாக அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் இரு கண்களையும் திறந்த நிலையில் நூல் நுனியை ஊசித் துளையில் எளிதாகச் செலுத்த முடிகிறது. மாறாக ஒரு கண் மட்டுமே திறந்த நிலையில் இச்செயலைப் புரிவது கடினமாகிறது.

8மின் இணைப்பைத் துண்டித்தவுடனே, சுழலுகின்ற மின்விசிறி ஏன் உடனடியாகச் சுழலுவதை நிறுத்துவதில்லை?
சுழலுகின்ற எல்லாப் பொருட்களைப் போன்றே, மின் விசிறியும் நிலைமக் கோட்பாட்டிற்கு (Principle of inertia) உட்படுகிறது; அதாவது உராய்வினாலோ (Friction) அல்லது வெளி விசையினாலோ நிறுத்தப்படும்வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விசிறியும் சுழன்று கொண்டே இருக்கும். மேசை விசிறி, தொங்கும் விசிறி இரண்டிலுமே விசிறியின் சுழலி (Rotor) மின் மோட்டாரினால் இயக்கப்படுகிறது. மேலும் சுழலியானது குண்டுதாங்கியில் (Ball bearing) பொருத்தப்பட்டு விசிறியின் பிற பாகங்களுடன் ஏற்படும் உராய்விலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதனால் விசிறி சுழலும்போது இரைச்சல் மிகுதியின்றி அமைதியாகச் சுற்றுகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் விசிறித் தகடுகளுக்கும் சுற்றுச் சூழலிலுள்ள காற்றுக்கும் இடையே நிலவும் உராய்வு விசை மட்டுமே விசிறியைத் தாக்கும் ஒரே விசையாகும். இதன் காரணமாகவே மின் இணைப்பு இல்லாத நிலையிலும் விசிறித்தகடுகள் சிறிது நேரம் சுழன்று பின்னர் நிற்கிறது. அடுத்து குண்டுதாங்கி இல்லாவிட்டாலும் கூட விசிறி சிறிது நேரம் சுழன்று பின்னர் நின்று விடும்.

8நீண்ட நேர உடற்பயிற்சிக்குப் பின்னரும், கடின உழைப்புக்குப் பின்னரும் உடல் முழுதும் வலியுண்டாவது ஏன்?
கடின உழைப்பு, நீண்ட உடற்பயிற்சி ஆகியவைகட்குப் பின்னர் உடலில் வலி தோன்றுவதற்குக் காரணம் களைப்புற்ற தசைகளில் சேரும் லாக்டிக் அமிலமேயாகும் (Lactic acid). தொடர்ந்து, நாள்தோறும், ஒழுங்காக உடற்பயிற்சி செய்வோரைவிட, நீண்ட இடை வெளிக்குப் பின்னர் திடீரென செய்வோருக்கே இத்தகைய வலியுண்டாகிறது. தொடர்ந்து பயிற்சி செய்வோருக்குத் தசைகள் தகைவை (Stress) ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்து விடுவதால் அவர்களுக்கு உடல்வலி அவ்வளவாக உண்டாவதில்லை. திடீரென்று பயிற்சி செய்வோருக்கும், கடின உழைப்புக்குப் பின்னரும், தசைகள் தகைவுக்கு உட்பட இயலாமைக்குக் காரணம் இழந்த ஆற்றலை உற்பத்தி செய்வதற்குப் போதுமான உயிர்வளி (Oxygen) இல்லாமையே. பயிற்சிக்கு உட்படும் தசைகள் ஆற்றலை இழந்து விடுகின்றன; இழக்கின்ற வேகத்தில் ஆற்றலைப் பெறுவதற்கு இயலுவதில்லை. இந்நிலையில் உடல், தசைகள் ஆற்றலைப் பெறுவதற்கு ஓர் அவசர ஏற்பாடாக லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் லாக்டிக் அமிலம் தொடர்ந்து பணிபுரியும் தசைகளில் சேர்ந்து வலியுண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. ஆனால் நாள்தோறும் ஒழுங்காகப் பயிற்சி செய்வோர்க்கு லாக்டிக் அமில அளவுடன் ஒத்துப்போகும் நிலை ஏற்பட்டுவிடுகிறது; மேலும் இரத்த ஓட்டமும் மிகுதியாகிறது. இதனால் அவர்களுக்கு வலியுண்டாவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

8கேக் (Cake) தயாரிப்பதற்கு சமையல் சோடாவைப் (Baking soda) பயன்படுத்துவது ஏன்?

சமையல் சோடாவைச் சேர்ப்பதன் மூலம் கேக், நுண்துளைகள் (Porous) கொண்டதாகவும் பருமனாகவும் (Puffy) அமைகிறது. சமையல் சோடா என்பது சோடியம் பை கார்பனேட் எனும் வேதிப்பொருள். இது வெப்பத்தின் காரணமாகவோ, அமிலங்களுடன் வினைபுரியும் போதோ சிதைவுற்று கார்பன்-டை-ஆக்சைடு எனும் வளிமம் வெளிப்படுகிறது. சமையல் சோடா கலந்த கேக்கைச் சூடாக்கும்போது மேற்கூறியவாறு உண்டாகும் கார்பன் - டை - ஆக்சைடின் காரணமாகக் கேக்கில் மென்மைத்தன்மையும், நுண்துளைகளும் உண்டாவதுடன் அது பருமனாகவும் மாறுகிறது. சமையல் சோடாவில் இருந்து உண்டாகும் இவ்வளிமம் கேக்கினுள் நுண்ணிய காற்றுக் குமிழ்களாக அடைபடுகிறது. இக்குமிழ்கள் வெப்பத்தின் காரணமாக விரிவடைகின்றன. இதனால் கேக், நுண்துளைகளும், மென்மைத் தன்மையும் கொண்டு பருமனாகவும் காட்சியளிக்கிறது
.
8நீருக்கு நிறமில்லை எனினும், நீரால் உண்டாகும் பனிக்கட்டி வெண்மையாக இருப்பது ஏன்?
பனிக்கட்டி, நுரை (Foam) இரண்டும் வெண்மையாக இருப்பதற்குக் காரணம் ஒன்றே. நுரை என்பது நுண்ணிய குமிழ்களின் (Bubbles) கூட்டம்; பனிக்கட்டியோ ஏராளமான பனிப்படிகங்களின் (Ice-crystals) இணைப்பு. பனிக்கட்டி, நுரை இரண்டிலும் முறையே படிகங்களுக்கு இடையேயும் குமிழ்களுக்கு இடையேயும் உள்ள இடைவெளியில் காற்று நிரம்பியிருக்கும். இந்தப் படிகக் குவியல் மீது ஒளிக் கதிர்கள் விழும்போது அவை வளைந்து போவதுடன், எதிரொளிக்கவும் (Reflected) செய்கின்றன. ஆனால் எல்லாப் படிகங்களும் ஒளிக்கதிர்களை ஒரே திசையில் எதிரொளிப்பதில்லை; மாறாகப் பல்வேறு திசைகளில் அவை சிதறி விடுகின்றன. காற்றின் காரணமாக இவ்வொளிச் சிதறல் மேலும் ஊக்குவிக்கப்படுகின்றது. இச்சிதறிய ஒளியே பனிக்கட்டியைப் பார்ப்பவர் கண்களை அடைகிறது. இதுவே பனிக்கட்டி வெண்மையாகத் தோன்றுவதற்குக் காரணம். தண்ணீரைப் பொறுத்தவரை, அதனுடைய மேற்பரப்பு சமமானது, மென்மையானது; எனவே ஒளியின் சிறு பகுதியே எதிரொளிக்கப் படுகிறது. தண்ணீர்ப் பரப்பில் விழும் ஒளியின் பெரும் பகுதி நீரினுட் புகுந்து செல்கிறது; அதன் காரணமாகவே தண்ணீர் தெளிவாக, நிறமின்றிக் காட்சியளிக்கிறது.

8பொதுவாகப் பெண்களின் தலையில் ஏன் வழுக்கை உண்டாவதில்லை?
முடி வளர்வதும், முடி உதிர்வதும் இயற்கை நிகழ்ச்சிகள். முடி உதிர்ந்த பின்னர் மீண்டும் முளைத்து வளர்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வாறு மீண்டும் முளைத்து வளர்வது நின்று போகிறது. இதற்கு, பால் தூண்டிகள் (Sex hormones), முக்கியமாக ஆண்ட்ரஜன் (Androgens) என்னும் ஆண் பால் தூண்டிகளே காரணம். முடி உதிர்வது மரபு வழிப்பட்டது என்பதை இன்னொரு காரணமாகவும் கூறலாம். குடும்பத்தில் தாய் வழியாகவோ, தந்தை வழியாகவோ மக்களுக்கு இது ஏற்பட வாய்ப்புண்டு. தந்தை வழுக்கைத் தலையராக இருப்பின் அவரது மகனுக்கும் வழுக்கை உண்டாகும். மாறாகத் தாய் தான் வழுக்கையின்றி இருப்பினும், வழுக்கை ஏற்படுவதற்கான மரபணுவைத் தன் மகனுக்குச் செலுத்துவதும் உண்டு.
வழுக்கை என்பது ஆண், பெண் இருபாலார்க்கும் பொதுவானதே; ஆண்களில் 40 விழுக்காட்டினர்க்கும், பெண்களில் 5 முதல் 10 விழுக்காட்டினர்க்கும் வழுக்கை ஏற்படலாம். பெண்கள் நீண்ட தலை முடியைக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு முடி உதிர்வது வெளிப்படையாகத் தெரிவதில்லை; உதிராமலிருக்கிற மற்ற முடிக் கற்றையால் வழுக்கை மறைக்கப்பட்டு விடுகிறது. மாறாக, ஆண்களுக்கு குட்டை முடி உள்ளதால் அவர்களின் முடி இழப்பு வெளிப்படையாகத் தெரிகிறது; குறிப்பாகத் தலையின் மேற்பகுதியில் வழுக்கை தெளிவாகக் காட்சியளிக்கிறது. இவை தவிர்த்து மன உளைச்சல், தோல் தொடர்பான நோய்கள், வேறு சில நோய்கள், போதைப்பொருள் பழக்கம், சில வேதிப் பொருள்கள் ஆகியனவும் தலை முடி உதிர்வதற்கான பிற காரணங்களாகும்.

8உடலில் அடிபட்டால் (Injury) சில பகுதிகளில் இரத்தம் வருவதும், சில பகுதிகள் வீங்கிப் போவதும் ஏன்?
உடலின் எப்பகுதியிலாவது, காயம் அல்லது அடிபட்டால், தோலில் சிராய்ப்பு உண்டாகி, அங்குள்ள இரத்தக்குழாய்கள்(Blood vessels) சேதமடைந்து இரத்தம் ஒழுகுவதுண்டு; ஆனால் எப்போதும் இச்செயல் நடைபெறவேண்டும் என்பதில்லை. கூர்மையற்ற பொருளால் உடலில் அடிபடும்போது, அடிபட்ட இடத்தில் இரத்தம் கசியாமல், வீக்கம் மட்டுமே ஏற்படுவதுண்டு. இரத்ததை எடுத்துச் செல்லும் மெல்லிய தந்துகிகள் (Capillaries) அடியின் காரணமாகச் சேதமடைந்து விடுவதால் அடிபட்ட பகுதியிலுள்ள திசுக்களுக்கு (Tissues) இரத்தம் செல்வதில் தடையேற்படுகிறது. மேலும் தந்துகியிலிருந்து வெளியேறும் ஓரளவு இரத்தம் அடிபட்ட திசுப் பகுதியில் தோலுக்குக் கீழ் சேகரிக்கப்பட்டு வீக்கமாகத் தோன்றுகிறது. அடுத்து, இரத்த ஓட்டத்தின் காரணமாக மேலும் மேலும் இரத்தம் வந்து அவ்விடத்தில் சேர்கிறது; அதே நேரத்தில் குறைந்த அளவு இரத்தமே அப்பகுதிக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுகிறது; இதன் காரணமாக வீக்கம் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். சில சமயம் அடிபட்ட பகுதியிலுள்ள திசுக்களின் சாறும் (Juice from tissues) அப்பகுதியில் சேகரிக்கப்பட்டு வீக்கம் மிகுதியாவதற்குக் காரணமாக அமைவதுண்டு. தந்துகிகள் சரியாகி, இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு வந்தவுடன், வீக்கம் குறைந்துவிடும்.

8மிதிவண்டியின் முன் கவடு (Front fork) வளைந்தும், பின் பக்கக் கவடு நேராகவும் இருப்பதன் காரணம் என்ன?
மிதிவண்டியின் முன்கவடு நேராக இல்லாமல் வளைந்திருப்பது இரு காரணங்களுக்காக வரவேற்கப்படுகிறது. முதலாவது இ•து ஓர் அதிர்வுத் தாங்கியாகப் (Shock absorber) பணி புரிகிறது எனலாம். முன்பக்கமுள்ள கவடு வளைந்து இருப்பதால் வண்டிக்கு ஏற்படும் அதிர்ச்சி கைப்பிடியைச் (Handle) சென்று சேராமல் பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. மிதிவண்டி ஓட்டுபவரின் எடை, வண்டி ஓடும்போது ஏற்படும் உராய்வு (Friction), இவ்விசைகளுக்கான எதிர்வினை (Reaction)ஆகிய இவைகளுக்கிடையே உண்டாகும் பல்வேறு விசைகளும் சக்கரம் தரையைத் தொடுமிடத்தில் வெளியேறுவதற்கு, வளைந்த முன்பக்கக் கவடு துணை புரிகிறது. இதனால் முன்சக்கரம் மேடுகளில் ஏறி இறங்கும்போது பக்கவாட்டில் திரும்பி விடாமல் வண்டி உறுதியாக நிலைத்து இருப்பதற்கு வழி செய்யப்படுகிறது. எனவே முன் பக்கத்தில் வளைந்த கவடு இருப்பது, மிதிவண்டி உறுதியாக நிலைத்து நிற்கவும், அதனை எளிதாக, வசதியாக ஓட்டுவதற்கும் துணை புரிகிறது.

8இரத்தக் காயம் ஏற்பட்ட பகுதியில் படிகாரத்தை (Alum) வைத்தால் இரத்தக் கசிவு நின்றுவிடுவது ஏன்?
காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிவதற்கு, அவ்விடத்திலுள்ள இரத்தக் குழல்கள் (Blood vessels) வெட்டப்படுவதே காரணம். இரத்தக் குழலில் வெட்டு சிறு அளவில் இருப்பின் இயற்கையான பாதுகாப்பு எதிர்வினையால் சிறிது நேரத்தில் இரத்தம் வெளியேறுவது நின்றுபோய் உறைகட்டி (Clotting) யாகிவிடும். இரத்தத்திலுள்ள சில காரணிகள் (Factors) அதிலுள்ள புரோட்டீனை நூலிழையாலான வலை போன்ற நுண்ணிய அமைப்பாக மாற்றுகிறது. இதுவே இரத்தக் கசிவைத் தடுக்கிறது. சில சமயங்களில் மேற்கூறிய வலைபோன்ற மாற்றம் சில வேதிப் பொருள்களால் குறிப்பாக உலோக அயனிகளால் (Metallic ions) உருவாக்கப்படும். படிகாரம் என்பது அலுமினியம் பொட்டாசியம் சல்பேட் எனப்படும் அணைவு உப்பு (Complex salt). படிகாரத்திலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் உறைவை விரைவுபடுத்தி கசிவைத் தடுக்கிறது. மேலும் படிகாரத்தின் துவர்ப்பு (Astringent) காரணமாக இரத்தக் குழல் சுருங்கியும் இரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது

8களைப்படைந்த கை கால் தசைகளை, யாரேனும் அமுக்கிவிட்டால் இதமாக இருப்பது ஏன்?
மிகுதியான வேலை அல்லது கடின உடற்பயிற்சி செய்தால் களைப்பு காரணமாக தசைகளில் வலி உண்டாகிறது. தசைகளுக்கு சாதாரண நிலையில் ஆற்றலை வழங்கும் அமைப்பு முறையால், அவை அதிக அளவு பணி செய்யும்போது போதுமான ஆற்றலை வழங்க முடிவதில்லை. இந்நிலையில் தசை உயிரணுக்கள் (Muscle cells) சர்க்கரைச் சிதைவு (Glycolysis) என்ற மாற்று முறையைக் கைக்கொள்கின்றன; இம்மாற்று முறையின்போது உடலிலுள்ள சர்க்கரை, லாக்டிக் அமிலமாக(Lactic acid) மாற்றமடைந்து தசைகளில் சேமிக்கப்படுகிறது. இந்த அமிலமே மிகுதியான வேலை அல்லது கடின உடற்பயிற்சிக்குப் பின்னர் தசைகளில் வலி ஏற்படக் காரணமாக அமைகிறது. வலியின் காரணமாக அவதியுறும் தசைகளை உருவி மென்மையாக அமுக்கி விட்டால், இரத்த ஓட்டம் அதிகரித்து சேமிக்கப் பெற்ற லாக்டிக் அமிலம் வெளியேற்றப்படுவதுடன் தேவையான உயிர்வளியும் (Oxygen) தசைகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அழுத்திவிடுவதன் வாயிலாக, தசைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் நரம்பு முனைகள் செயலூக்கம்பெற்று, அவை மூளையிலுள்ள உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டு வலி நீக்கத்திற்கான வேதிப் பொருட்களை வெளிக் கொணர்கின்றன. இம்முறைகளில் தசைகள் வலியும், களைப்பும் நீங்கப்பெற்று இதமான உணர்வைப் பெறுகின்றன.

8ஓட்டப்பந்தய வீரர், ஓடத் துவங்கும் முன்னர், நின்ற நிலையில் இராமல், குனிந்த நிலையில் இருப்பது ஏன்?
ஓட்டப்பந்தய வீரர் சமிக்ஞை வந்தவுடனே திடீரென ஓடத் துவங்குவதுடன், வேகத்தின் முடுக்கத்தையும் (Acceleration) அதிகரிக்க வேண்டும். பந்தய வீரர் நின்ற நிலையில் இருந்தால் கீழ்ப்புறம் வினை புரியும் அவரது உடல் எடை முழுதும், தரையில் இருந்து உண்டாகும் மேற்புற எதிர்வினையினால் (Reaction) சமன் செய்யப்பட்டு விடுகிறது. எனவே பந்தய வீரருக்கு ஓட்டத்தைத் துவக்குவதற்குத் தேவையான முடுக்கத்தைக் கொடுக்கும் ஒரே விசை, அவரது காலடியினால் தரையைத் தேய்த்துத் தள்ளிடும்போது தரையின் எதிர்வினையால் உண்டாகும் விசை மட்டுமே. இவ்விசை, ஓட்டத்தைத் துவக்குவதற்குப் போதுமானதல்ல. இத்தகைய செயல் நாம் நடக்கும் போதும் உண்டாகிறது எனலாம். ஆனால் பந்தய வீரர் முதுகை வளைத்துக் குனிந்த வண்ணம் இருக்கும்போது உடல் எடையால் உண்டாகும் கீழ்நோக்கு விசை, தரையின் எதிர் வினையால் உண்டாகும் மேல் நோக்கு விசை ஆகிய இரண்டும் ஒரே வரிசையில் இருப்பதில்லை. எனவே ஒரு பகுதி, அதாவது உடல் எடையின் செங்குத்துப்பகுதி (Vertical) மட்டுமே தரையின் எதிர்வினையால் சமன் செய்யப்படுகிறது. உடல் எடையின் மீதமுள்ள கிடைப்பகுதி (Horizontal) எடையினால் உண்டாகும் விசை ஓட்டத்தைத் துவக்குவதற்குத் தேவையான முடுக்கத்தை அளிக்கிறது; எனவே, பந்தய வீரரால் மிகுந்த வேகத்துடன் ஓட்டத்தைத் துவக்க முடிகிறது.

8காய்ச்சல் வந்தவர்களுக்கு உணவின் சுவையுணர்வு மாறுபட்டு இருப்பது ஏன்?
புலன்களின் உணர்வுகளைப் பற்றி அனைவரும் நன்கு அறிவோம்; எனினும் அவற்றின் சில செயல்பாடுகள் அறிஞர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அவற்றுள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மாறுபட்ட சுவையுணர்வும் ஒன்றாகும். இதற்கான காரணம் இன்னும் சரியாக விளங்கவில்லை; எனினும் சுவையுணர்வு பற்றி இதுவரை அறிந்தவற்றின் அடிப்படையில் சில யூகங்களை மேற்கொள்ளலாம். நாக்கில் சுவைமுகிழ்ப் பகுதிகள் (Taste buds) உள்ளன; இவற்றின் அடிப்பகுதியில் சுவை நரம்புகள் (Taste nerves) உண்டு; நமது உடலின் சாதாரண வெப்ப அளவு நிலையில் (Temperature) இந்நரம்புகள் மிகவும் உணர்திறன் (Sensitivity)கொண்டதாக இருக்கும். மாறாக இயல்பு வெப்ப நிலையிலிருந்து மிக அதிகமாகவோ அல்லது மிகவும் குறைந்தோ வெப்ப அளவு இருப்பின் அந்நிலையில் சுவை நரம்புகளின் உணர்திறன் குறைந்துவிடும். காய்ச்சல் அடிப்பவரின் உடல் வெப்ப நிலை இயல்பு நிலைக்கு மிகுதியாக இருப்பது, உணவின் சுவையுணர்வு மாறுபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

8புல்வெட்டு கருவியை (Lawn-Mower) இழுப்பது எளிதாகவும் தள்ளுவது கடினமாகவும் இருப்பது ஏன்?
ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் பல்வேறு விசைகளின் உள்வினையைப்(Interaction) பொறுத்தே அப்பொருளை இயக்குவது எளிமையானதா? அல்லது கடினமானதா? என்று உணரப்படும். தள்ளுவிசை அல்லது இழுவிசையில் இரு பகுதிகள்/கூறுகள் உண்டு. ஒன்று கிடையாகவும் (Horizontally), மற்றொன்று செங்குத்தாகவும் (vertically) வினை புரியும். ஒரு பொருளைத் தள்ளும்போது, விசையின் செங்குத்துப் பகுதி கீழ்ப்புறம் செலுத்தப்படும்; இது பொருளின் எடையுடன் சேர்ந்து கீழ்ப்புறம் அழுத்துகிறது. அப்போது அப்பொருளை இயக்குவதற்கு / தள்ளுவதற்குக் கிடைப்பகுதியில் அதிகமான விசையைச் செலுத்த வேண்டியதாகிறது. மாறாக அப்பொருளை இழுக்கும்போது, அப்பொருளின் செங்குத்துப் பகுதி மேல்நோக்கி வினை புரியும்; அப்போது கீழ் நோக்கி இழுக்கும் எடையின் ஒரு பகுதி நீக்கப்படுகிறது. எனவே புல்வெட்டுக் கருவியை இழுப்பது எளிதாக உள்ளது.

8விரைந்து செல்லும் வாகனத்தை ஒளிப்படம் (Photograph) எடுத்தால் சில சமயம் அது தெளிவற்று இருப்பது ஏன்?
ஓர் ஒளிப்படம் தெளிவாக இருப்பதும், தெளிவற்று இருப்பதும் ஒளிப்படக் கருவியில் (Camera) உள்ள மூடியை (Shutter) எவ்வளவு விரைவாக விடுவிக்கிறோம் என்பதைப் பொறுத்ததாகும். வாகனம் விரைந்து செல்லும்போது அதனைப் படலத்தில் (Film) பதிவு செய்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவாக இருக்குமானால், அந்நிலையில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். அவ்வாறின்றி விரைந்து செல்லும் ஒரு பொருளைப் படம் எடுக்கையில் ஒளிப்படக் கருவியின் மூடியைத் திறந்து விடுவிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், அந்நிலையில் பதிவாகும் ஒளிப்படம் தெளிவற்று இருக்கும். மேலும் படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவி அசைந்துவிட்டாலும் கூட, எடுக்கப்படும் ஒளிப்படம் தெளிவின்றி பதிவாகும் வாய்ப்புண்டு. தெளிவான, பளிங்கு போன்ற ஒளிப்படங்களை எடுப்பதற்கு மூடியை விடுவிக்கும் நேரம் மிக மிகக் குறைவாக, அதாவது ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு இருப்பதும் சிறந்ததே

8மருத்துவ வெப்பமானியைப் பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள பாதரசத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர, அதனை நன்றாக உதறுவது ஏன்?
மனித உடலின் வெப்பநிலையை அளவிடுவதற்கு மருத்துவ வெப்பமானியைப் பயன்படுத்துகிறோம். இவ்வெப்பமானியின் குமிழ்ப் பகுதிக்குச் சற்று மேலே இடுக்கான (Constricted) சிறு பகுதி இருப்பதைக் காணலாம். வெப்பநிலை உயரும்போது பாதரசம் விரிவடைந்து குமிழ்ப் பகுதியிலிருந்து இடுக்கு வழியாக குழாயினுள் செல்லும். வெப்பமானியைப் பயன்படுத்திய பின்னர் வெளியே எடுக்கும்போது பாதரசக் கம்பம் இடுக்குப் பகுதியில் பிளவுற்று, தடைப்படுகிறது. இதனால் இயல்பான வெப்பநிலையில் குழாயினுள் இருக்கும் பாதரசம் குமிழ்ப்பகுதிக்குச் செல்லாமல் முன்பிருந்த நிலையிலேயே நின்றுவிடுகிறது. மேலும் பாதரசத்தை வலிந்து செலுத்துவதற்கான விசை எதுவுமில்லாததும், குழாயில் பாதரசத்தின் நிலை மாறாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக உள்ளதெனலாம். இந்நிலையில் வெப்ப மானியை நன்றாக உதறும்போது அதிர்வின் காரணமாக குழாயினுள் இருக்கும் பாதரசம் இடுக்கு வழியாக குமிழ்ப் பகுதியைச் சென்றடையும். சாதாரண வெப்பமானிகளில் மேற்கூறிய இடுக்குப் பகுதி இல்லாததால், வெப்பத்தின் உயர்வு தாழ்வுக்கு ஏற்ப பாதரசக் கம்பத்தின் உயரம் ஏறுவதும் இறங்குவதும் தடையேதுமின்றி இயல்பாக நிகழ்கிறது.

8நீர்வேட்கை மிகுந்த நிலையில் பலரும், வெதுவெதுப்பான பானங்களைவிட, குளிர்ந்த நீர் அல்லது பானங்களை, விரும்பிப் பருகுவது ஏன்?

மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான (Nerve cells) வேட்கை மையம் (Thirst center) எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது மேற்கூறிய வேட்கை மையத்தில் அது உணரப்பெற்று நமக்கு நீர் வேட்கை உண்டாகிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் (lining) வறண்டு போகும்போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தண்மையடைந்து வறட்சி தணியப்பெறுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுகிறது.

8சமையல் பாத்திரங்களை, சாம்பலைப் பயன்படுத்தி எவ்வாறு தூய்மையாகக் கழுவ முடிகிறது?
விறகோ அல்லது கரியோ எரிக்கப்பட்டு சாம்பல் உண்டாகிறது. காரத்தின்(Alkaline) மிச்சங்களும், சிலிக்கா (Silica) போன்ற கழிவும் சேர்ந்ததே சாம்பலாகும். இந்தக் காரக் கூட்டுப்பொருளில் கலந்துள்ள கார்பனேட்டுகள்(Carbonates) தூய்மையாக்கும் பணிக்குக் காரணமாக அமைகின்றன. சாம்பலைக் கொண்டு தேய்த்துக் கழுவும்போது பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிசுபிசுப்புப் பொருள்களும், அழுக்குகளும் நீக்கப்பெறுகின்றன. மேலும் பொடியான சிலிக்காத் துகள்கள் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்குகளையும், பிசுப்புப் பொருள்களையும் சுரண்டி நீக்குவதுடன், கழுவிய பின்னர் பாத்திரங்கள் தூய்மையாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கவும் துணை செய்கின்றன

8கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை?
கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு மையம் (Centre of gravity) நமது காலடியில் விழும்; இதனால் நமது உடல் சமநிலையில் நிற்க முடிகிறது. நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றமுறுவதால் ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில் நமது கைகள் கட்டப்பட்டிருக்குமானால், உடலின் சமநிலை தடுமாறி கீழே விழ நேரிடும். இயல்பாக நடக்கும்போதோ, ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை கால்கள் முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குவதனால், ஈர்ப்பு மையம் உடலின் அடிப்பகுதியிலேயே நிலைபெற்றிருக்குமாறும், அதனால் உடலின் சமநிலை தடுமாறாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும்போதும், ஓடும்போதும் மேற்கூறிய சமநிலை பராமரிக்கப்படுவதில்லை. எனவே அந்நிலையில் ஓடுவதோ அல்லது நடப்பதோ மிகவும் கடினமான செயலாகிவிடுகிறது.

8குவார்ட்ஸ் கடிகாரம் (Quartz clock) அப்பெயரால் வழங்கப்படுவதற்கு என்ன காரணம்?

குவார்ட்ஸ் என்பது ஒருவகைப் படிகக் (Crystal) கல் அல்லது பளிங்குக் கல்; இதனைக் குவார்ட்ஸ் கடிகாரங்களின் இதயம் என்று கூறலாம். இப்படிகம் பீசோ மின்சாரம் (Piezo electricity) எனும் பண்பைக் கொண்டுள்ளது. இதன்படி மாறு மின்னோட்டம் செலுத்தப்படும் போது மேற்கூறிய படிகம் நிலையான அதிர்வெண்ணில் அதிரும். சாதாரண சுவர் மற்றும் கைக் கடிகாரங்களில் சுருள்வில்லால் (spring) இயக்கப்படும் சமநிலை அலைவுச் சக்கரம் (Balanced oscillating wheel) உள்ளது. இச்சக்கரம் கடிகார முள் நகர்வதற்கும், சரியான நேரத்தைக் காட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. குவார்ட்ஸ் கடிகாரங்களில் அப்பணியைச் செய்வதற்கு குவார்ட்ஸ் படிகங்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. இதிலுள்ள அலைவு மின்சுற்றில் (Oscillating electric circuit) படிகங்களின் இயல்பு அதிர்வெண்ணுக்கு இணையான அதிர்வெண்களைக்கொண்ட அலைவு நிகழ்த்தப் பெறுகிறது. இதனால் கடிகாரத்தின் முழு அமைப்பும் படிகத்தின் அதிர்வுக்கு இணையான அதிர்வெண்களைக் கொண்டதாக அமையும். இவ்வாறு நிலையான அதிர்வைப் பெறுகிற படிக அமைப்பின் அலைவு மின்னழுத்தத்தால் பற்சக்கரத் தொடரில் (Gear train) இணைக்கப்பட்டுள்ள மிகச் சிறு அளவிலான மோட்டார் இயக்கப்பெறுகிறது. இம்மோட்டார் நொடி, நிமிடம், மணி ஆகிய வற்றைக் காட்டுகின்ற கடிகார முள்களை நகர்த்தி கடிகாரத்தை ஓடச் செய்கிறது. இதனாலேயே இவ்வகைக் கடிகாரம் குவார்ட்ஸ் கடிகாரம் என்று அழைக்கப்படுகிறது.

8குளிர் காலங்களில் நமது கை, கால், உதடுகளில் வெடிப்பு உண்டவது ஏன்?
புலன்களின் உணர்வுகளைப் பற்றி அனைவரும் நன்கு அறிவோம்; எனினும் அவற்றின் சில செயல்பாடுகள் அறிஞர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அவற்றுள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மாறுபட்ட சுவையுணர்வும் ஒன்றாகும். இதற்கான காரணம் இன்னும் சரியாக விளங்கவில்லை; எனினும் சுவையுணர்வு பற்றி இதுவரை அறிந்தவற்றின் அடிப்படையில் சில யூகங்களை மேற்கொள்ளலாம். நாக்கில் சுவைமுகிழ்ப் பகுதிகள் (Taste buds) உள்ளன; இவற்றின் அடிப்பகுதியில் சுவை நரம்புகள் (Taste nerves) உண்டு; நமது உடலின் சாதாரண வெப்ப அளவு நிலையில் (Temperature) இந்நரம்புகள் மிகவும் உணர்திறன் (Sensitivity) கொண்டதாக இருக்கும். மாறாக இயல்பு வெப்ப நிலையிலிருந்து மிக அதிகமாகவோ அல்லது மிகவும் குறைந்தோ வெப்ப அளவு இருப்பின் அந்நிலையில் சுவை நரம்புகளின் உணர்திறன் குறைந்துவிடும். காய்ச்சல் அடிப்பவரின் உடல் வெப்ப நிலை இயல்பு நிலைக்கு மிகுதியாக இருப்பது, உணவின் சுவையுணர்வு மாறுபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

8அழுக்கான துணியை வெளுக்கும்போது கல் அல்லது தரை மீது அடித்துத் துவைப்பது ஏன்?
அழுக்குத் துகள்கள், எண்ணெய் அல்லது பிசுபிசுப்பான பொருள்களுடன் சேர்ந்து நமது ஆடைகளில் ஒட்டிக்கொள்வதால் துணிகள் அழுக்கடைகின்றன. தண்ணீரில் துணியை நனைப்பதனால் மட்டுமே இந்த அழுக்குகள் நீக்கப்பெறுவதில்லை. சோப்பு, சலவைத்தூள், சலவை சோடா போன்றவற்றைப் பயன்படுத்தியே அழுக்குகளை நீக்க இயலும். சோப்புக்கட்டி அல்லது சலவைத்தூளைப் பயன்படுத்துவதன் வாயிலாக தண்ணீருக்கும் பிசுபிசுப்புப் பொருட்களுக்கும் இடையேயுள்ள பரப்பு இழுவிசை (Surface tension) குறைக்கப்படுகிறது; இதன் விளைவாக பிசுபிசுப்புப் பொருளும் அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குத் துகள்களும் துணியிழைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இருப்பினும் துணியிழைகளுக்கு இடையே தங்கியிருக்கும் அழுக்குத் துகள்களை அவ்வளவு எளிதாக நீக்க முடிவதில்லை. கல் அல்லது தரை மீது அடித்துத் துவைக்கும்போதுதான் துணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குத் துகள்கள் எளிதாக வெளியேற்றப்படுகின்றன.

8காரம், நெடி மிகுந்த உணவை உண்ட பின்னர், சூடான பால், தேனீர் ஆகியவற்றை அருந்தினால், சூடும், காரமும் மிகுதியாக உணரப்படுவது ஏன்?
உப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நான்கும் அடிப்படைச் சுவைகள். இவற்றிற்கான சுவை முகிழ்ப் பகுதிகள் (Taste buds) நாக்கின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இனிப்பிற்கான சுவை முகிழ்ப் பகுதி நாவின் நுனியிலும், பிறவற்றிற்கான சுவைமுகிழ்ப் பகுதிகள் நாவின் பின்புறப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. மிளகாய் போன்றவற்றின் சற்று கடுமையான காரச் சுவை நாவின் பின்பகுதியில் அமைந்துள்ள வலி உணர் நரம்புகளின் (Pain sensitive nerves) தூண்டுதலால் (Stimulation) உண்டாகிறது. மிளகாய் மற்றும் மசாலா கலந்த உணவை உண்ணும்போது காரச் சுவை மேலோங்கி இருக்கும்; இந்நிலையில் உடனே சூடான தேனீர், பால் போன்ற பானங்களை அருந்தினால் ஏற்கனவேயுள்ள சுவையுணர்வு மேலும் ஊக்குவிக்கப்பெற்று மிகுந்த காரத்தை உணர்கிறோம்.

8உயிருள்ள உடல் தண்ணீரில் மூழ்குவதும், இறந்த உடல் நீரில் மிதப்பதும் ஏன்?
இறந்த உடலை நீரில் எறிந்த உடனே, முதலில் அதுவும் மூழ்கத்தான் செய்யும். இறந்த உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) நின்றுபோய் உடல் சிதையத் (Decomposition) துவங்குகிறது. இந்நிலையில் சில வாயுக்கள் (Gases) இறந்த உடலின் பள்ளமான குழிவுப் பகுதிகளில் சேர்கின்றன. இதன் விளைவாக உடல் எடை குறைந்து இலேசானதாகிறது. ஆனால் உடல் ஊதிப்போகும். இப்போது இறந்த உடலால் வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை அவ்வுடலின் எடையைவிட மிகுதியாக இருப்பதால், அது நீர்ப் பரப்புக்கு மேலே வந்து மிதக்கிறது. ஆனால் உயிரோடிருப்பவர் தண்ணீரில் இருக்கும்போது அவர் உடலின் எடையைவிட வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை குறைவாக இருப்பதால் உடல் நீரில் மூழ்குகிறது. எனவே மூழ்குவதைத் தவிர்ப்பதற்கு உயிரோடிருப்பவர் நீச்சலடித்து நீர்ப் பரப்புக்கு மேலே மிதக்கக் கற்றுக்கொள்ள வேண்டியதாகிறது.

8பல ஆண்டுகள் விண்வெளியில் மிதக்கும் விண்கலங்களுக்கு (Space crafts) வேண்டிய ஆற்றல் எவ்வாறு அளிக்கப்படுகிறது?
கோள்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் மற்றும் துணைக்கோள்கள் (Satellites) ஆகியவற்றிற்குத் தேவையான ஆற்றல் பொதிகள் (Energy packages) அவைகளுடன் சேர்த்தே அனுப்பப்படுகின்றன. இப்பொதிகள் கதிரியக்க ஐசோடோப் வெப்ப மின் இயற்றிகள் (Radioisotope thermoelectric generators) வடிவத்தில் இருப்பவை. புளுடோனியம் (Plutonium), ஸ்ட்ரோண்டியம் (Strontium) போன்ற கதிரியக்கத் தனிமங்களைச் (Radioactive elements) சிதைத்து வெப்பம் உண்டாக்கப்படுகிறது; இவ்வெப்பத்தைப் பயன்படுத்தி ஈய-டில்லுரைட் கலப்புலோகம் (lead-telluride alloy), சிலிகான்-ஜெர்மானியம் கலப்புலோகம் (silicon-germanium alloy) போன்ற வெப்ப இரட்டை வரிசைகளில் (Thermo couple series) மின் ஆற்றல் பெறப்படுகிறது. ஸ்ட்ராண்டியம் _ 90 போன்ற கதிரியக்க ஐசோடோப்புகளின் ஆயுள் பத்தாண்டுக்கும் மேற்பட்டது; பல ஆண்டுகள் தொடர்ந்து மின்னியற்றியாகப் (Generators) பணி புரியக்கூடியது. எனவே தொடர்ந்து பல ஆண்டுகட்குத் தேவையான ஆற்றல் இதன் வாயிலாகப் பெறப்படுகிறது. ஆளில்லாத விண்கலமாக இருப்பின் இவற்றிற்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுவதில்லை. கதிரவனுக்கு அருகில் இருக்கும் செவ்வாய், புதன் போன்ற கோள்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்களாக இருப்பின் அவற்றிற்குத் தேவையான ஆற்றலை கதிரவ மின்கலங்கள் (Solar cells) வாயிலாக சூரியக் கதிர்களைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.

8தலையில் முடி நீண்டு வளர்வது போன்று உடற்பகுதியில் ஏன் வளர்வதில்லை?
மனித இனம், பல இலட்சம் ஆண்டுகளாக, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, பல்வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த பண்புக் கூறுகளை (distinct traits) உருவாக்கிக்கொண்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட பண்புகளுள் ஒன்றுதான் மண்டையில் நீண்ட முடி வளர்வதும், உடலின் பிற பகுதிகளில் குறைவான முடி வளர்வதுமாகும். மண்டையில் வளரும் முடி சூரிய ஒளியின் நேரடித் தாக்கத்திலிருந்து தலைப் பகுதியைக் காக்கிறது. பல இலட்சம் ஆண்டுகளாக மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் உருவான தலையில் நீண்ட முடி வளர்தல் எனும் இப்பண்புக்கூறு, மாறிவரும் சூழலுக்கிடையே மரபுவழிப்பட்டதாக இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மரபுவழியின் அடிப்படை அலகான மனித மரபணுக்கள் (Human genes) இன்று மனித உடலின் முடி வளர்ச்சியில் தமது கட்டுப்பாட்டைச் செலுத்தி வருகின்றன எனலாம்; இதன் விளைவே மண்டையில் நீண்ட முடி வளர்வதும், உடலின் பிற பகுதிகளில் நுண்ணியதாக முடி வளர்வதும் அல்லது முடியே இல்லமலிருப்பதுமாகும்.

8குளிர்ந்த நீரைவிட சூடான நீர் விரைவாக உறைந்து போவது ஏன்?
ஒரு பொருளின் குளிர்ச்சி வீதம் (Rate of Cooling) அப்பொருளின் வெப்பநிலைக்கும் அதன் சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் அமையும் __ இது நியூட்டனின் குளிர்ச்சி விதியாகும் (Newton’s Law of Cooling). இவ்விதியின்படி சூடான பொருள் குளிர்ந்த பொருளைவிட விரைவாக உறைநிலையை (Freezing point) அடைந்து உறைந்துபோகும். மேலும் சூடான நீர் உயர்ந்த வெப்பநிலையில் இருப்பதால், ஆவியாதல் நிகழ்ச்சியின் (Evaporation) வாயிலாக குளிர்ந்த நீரைவிட விரைவாகத் தனது நிறையை (Mass) இழக்கும் வாய்ப்பை அடைகிறது. இதன் காரணமாகச் சூடான நீர் உறைநிலையை அடையும் நேரத்தில் குளிர்ந்த நீரைவிட நிறை குறைந்து இருக்கும். எனவே நிறை குறைந்த சூடான நீரை உறைய வைப்பதற்கு குறைவான வெப்பத்தையே வெளியேற்ற வேண்டும்; மாறாக நிறை மிகுந்த குளிர்ந்த நீரை உறைய வைக்க மிகுதியான வெப்பத்தை வெளியேற்றவேண்டும். இதன் காரணமாகச் சூடான நீர், குளிர்ந்த நீரைவிட விரைவில் உறைந்து போகிறது.

8நனைந்த துணியில் உள்ள நீரை வெளிக்கொணர, அத்துணியை முறுக்கிப் பிழிவது ஏன்?
பருத்தித் துணியானது உள்ளீடற்ற (Hollow)செல்லுலோஸ் எனப்படும் நார் இழைகளாலானது. பருத்தித் துணியை தண்ணீரில் நனைக்கும்போது மேற்கூறிய இழைகளின் வெறுமிடத்தில் தண்ணீர் சேர்ந்து தங்கி விடுகிறது. இத்தண்ணீர் சாதாரணமாக வெளியேறுவதில்லை; எனவே வலிந்து வெளியேற்ற வேண்டியதாகிறது. ஈரத்துணியை முறுக்கிப் பிழியும்போது துணியின் இழைகளில் தங்கி இருக்கும் தண்ணீர்த் துளிகள் அழுத்தப்பெற்று வெளியேற்றப்படுகின்றன. ஆனால் நைலான் பாலியஸ்டர் (Polyester)போன்ற செயற்கை இழைகளில் (Synthetic fibers) பருத்தித் துணியிழைகளில் இருப்பது போன்ற உள்ளீடற்ற பகுதி இல்லை. எனவே அவ்விழைகள் தண்ணீரை உறிஞ்சுவதில்லை. மேலும் அவை நீரெதிர்ப்புத் தன்மையுடையன. எனவே செயற்கை இழைத் துணிகளை நீரில் நனைத்தால், தண்ணீர் அத்துணிகளின் மேற்பரப்பில் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே அவற்றை முறுக்கிப் பிழியாமல் உலர்த்தினாலே போதும்.

8வெப்பத்தினால் பிளாஸ்டிக் உருகுவது போன்று மரக்காட்டை ஏன் உருகுவதில்லை?
ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அமைப்பைக் (Molecular structure) கொண்டுள்ளது; இவ்வமைப்பில் மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் எளிய விசையினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒரு பொருள் உருக வேண்டுமெனில், அதனை அதன் உருகுநிலை (Melting point) அளவுக்குச் சூடுபடுத்த வேண்டும். ஒரு பொருளைச் சூடுபடுத்துவதன் வாயிலாக, அப்பொருளின் மூலக்கூறுகளை இணைத்து வைத்திருக்கும் எளிய விசை முறிக்கப்படுகிறது. அதாவது வெப்பநிலை உயர்வினால் இம்மூலக்கூறுகள் ஆற்றல் பெற்று தம்மை இணைத்து வைத்திருக்கும் அமைப்பை அழித்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக்கைச் சூடுபடுத்தினால் அது உருகுவதற்குக் காரணம் அதன் மூலக்கூறுகளைப் பிணைத்து வைத்திருக்கும் எளிய விசைகள் முறிக்கப்படுவதேயாகும். ஆனால் மரக்கட்டை போன்ற பொருட்கள் உருகுநிலைப் புள்ளி நிலையை (Melting point stage) அடைவதற்கு முன்பே உயிர்வளியுடன் (Oxygen) கலந்து எரிந்துவிடுகின்றன. எனவே இத்தகைய பொருட்களை உருகவைப்பது இயலாததாகும்.

8குழந்தைகளின் பால் பற்கள் ஏன் விழுந்து விடுகின்றன?
வளர்ந்து வரும் தாடை எலும்புகளில் (jaw bones) 32 பற்களுக்கும் இடமளிக்கும் பொருட்டு பால் பற்கள் விழ வேண்டியது கட்டாயமாகிறது. பின்னர் தோன்றப் போகும் இப்பற்கள் அளவில் பெரிதானவை; பல ஆண்டுகளுக்கு உறுதியாக நிலைத்திருக்கப் போகின்றவை. குழந்தை பிறந்த ஆறேழு மாதங்களில் சுமார் 20 பால் பற்கள் முளைக்கத் துவங்குகின்றன; இவையனைத்தும் அதற்கு இரண்டரை அல்லது மூன்றாண்டுகள் நிரம்பும்போது முழுமையாக வளர்ந்து விடுகின்றன. குழந்தை வளர வளர அதன் தாடை எலும்பும் பெரிதாக வளர்கிறது. அப்போதுதான் பின்னர் தோன்றப்போகும், அளவில் பெரிய, நிலையான பற்களுக்கு இடமளிக்க இயலும். பால் பற்கள் தோன்றும்போதே, நிலையான பற்களும் முளைக்கத் துவங்குகின்றன என்பதுதான் உண்மை. இப் பற்கள் வளர்கையில், பால் பற்களின் வேரைத் துண்டித்து விடுகின்றன. இதனாலேயே பால் பற்கள் விழ வேண்டியதாகிறது. முதலாவது கடைவாய்ப் பல் முளைக்கத் துவங்கும் போது குழந்தையின் பால் பல் விழத்துவங்குகிறது; இந்நிகழ்ச்சி குழந்தையின் ஆறாவது வயதில் நடைபெறுகிறதெனலாம்.

8பதியம் செய்யப்பெற்ற உறுப்புகளை (transplanted organs) உடல் ஏற்க மறுப்பது ஏன்?

தனிப்பட்ட ஒவ்வொருவரின் உடலிலும் சில சிறப்புப் புரோட்டின் மூலக்கூறுகள் (molecules)உள்ளன. இவையே பதியம் செய்யப்பெற்ற சிறுநீரகம் போன்ற உறுப்புகள் நிராகரிக்கப் படுவதற்குக் காரணமாக அமைகின்றன. எதிர்ப்புப் பொருள்கள் (anti-bodies) என அழைக்கப்பெறும் மேற்கூறிய மூலக்கூறுகள், அயல் உறுப்புகளை அவற்றிலுள்ள எதிர்ப்புத் தூண்டிகள் (antigens) வாயிலாக எளிதில் இனம் கண்டு கொள்ளுகின்றன. நோயாளி ஒருவருக்குப் பதியம் செய்யப்படவேண்டிய உறுப்பு மற்றொருவர் உடலில் இருந்து பெறப்படுவதாகும். இவ்வாறு பெறப்படும் உறுப்பில் உள்ள எதிர்ப்புத் தூண்டிகள் நோயாளியின் உடலில் இருப்பதில்லை. எனவே நோயாளிக்கு உறுப்பு பதியம் செய்யப்பட்டவுடன், அவரது உடலில் எதிர்ப்புப் பொருள்கள் தோன்றுகின்றன; அவை பதியம் செய்யப்பட்ட உறுப்பிலுள்ள எதிர்ப்புத் தூண்டிகளை எதிர்த்துப் போரிடத் துவங்கும். இதனால் கொடையாகப் பெறப்பட்ட உறுப்பு அழிக்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு நெருங்கிய உறவினர்களிடமிருந்து உறுப்புகளைப் பெற்றுப் பதியம் செய்தல், அல்லது மாற்றுக் குருதியை விரவிக்கும் (blood transfusion) போது கடைபிடிக்கப்பெறும் திசு ஒத்திசைவு(tissue matching) முறையைக் கையாளுதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் பதியம் செய்யப்பெற்ற பிறகு தகுந்த மருந்துகளை நோயாளிக்கு அளிப்பதன் வாயிலாகவும் உறுப்புகள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்